முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கு தெரிந்த வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை தத்துவத்தை அறிந்தவர் உண்டோ? 


பலரும் பலவிதமாக கூறுகின்றனர். அவரவருக்கு தெரிந்த மாதிரி. கேட்பவருக்கு ஏற்ற மாதிரி. மனிதன் தோன்றிய காலம் முதல் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே வருவது போல, மனித மனங்களும் மாறிக்கொண்டே வருகிறது.

  ஷேக்ஸ்பியர்' சொன்னார் 'உலகம் ஒரு நாடகமேடை; நாமெல்லாம் நடிகர்கள்' என்று.  சற்றே கற்பனை செய்தால் சரியென்றே தோன்றுகிறது. பெரிய மேடை, 780 கோடி நடிகர்கள் (உலக மக்கள்தொகை).  ஒவ்வொருவரின் கதாபாத்திரம், தன்மை (Role,Character, casting), வேறுவேறு. சூழலை (situation) மட்டும் இயக்குபவர்- கடவுள். அப்படியானால் கடவுள் இருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? வேதங்களையும், சங்க நூல்களையும், சனாதன தர்மத்தையும் நம்பும் நான் ஆத்திகன். கடவுள் இருக்கிறார் என்றுதான் கூறுவேன். 
சுஜாதா ' கடவுள் தேவைப்படுகிறார்' என்கிறார் ( அவரது ' கடவுள் இருக்கிறாரா' - வாசியுங்கள், நல்ல அனுபவம் -  சிந்திக்க வைத்துவிடுவார்)

நினைத்துப்பாருங்கள். 780 கோடி மனிதர்களுக்கும் குணாதிசயம், சூழல் வேறுவேறு. அண்ணன் தம்பி, ஏன் இரட்டையருக்கு கூட ஒரே மாதிரி இல்லை. உனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை (கதாபாத்திரத்தை) வாழ்ந்தால் போதும், விதிக்கப்பட்ட வயது வரை. ஏன் அவனுக்கு ராஜா வேஷம், இவனுக்கு பிச்சைக்காரன் வேஷம்?  ஒவ்வொருவருக்கும் ஏன் வெவ்வேறு வயதில் முடிவு? என்று கேட்கிறீர்களா? கர்மா - என்கிறது இந்து மதம். உனது பாத்திரத்தை சிறப்பாக செய். நீீீீீயும் ராஜாவாகலாம்.

அப்படியானால், ராஜா சிறந்தவன், பிச்சைக்காரன் மோசமானவனா? உயர்ந்தவன், தாழ்ந்தவன் உண்டா? இல்லவே இல்லை..அது பார்ப்பவர் மனதில்தான் உள்ளது. அவரவர் தலைவலி அவர்களுக்குதானே தெரியும். ஒருவரின் வாய்ப்பு வசதிகள், அவர்களுக்கான பிரச்சினைகள், துயரங்கள் கர்மாவின் பலன்கள்  என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

ஒருவரின் வாழ்க்கை 70 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் 25 ஆண்டுகள் தூக்கம் மட்டுமே. 15 ஆண்டுகள் இளமைக்காலம். நாம் எந்த முடிவும் எடுக்க இயலாத காலம். மீதி 30 ஆண்டுகள்தான் நாம் நாமாக வாழும் காலம் (எவ்வளவு சிறியவாழ்க்கை!). இதில் படிப்பு, வேலை, இல்லறம், பொதுவாழ்க்கை, பொழுது போக்கு அனைத்தும் அடக்கம்.  மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம்,காமம், குரோதம் ஆகிய உணர்வுகளுக்கும் 30 ஆண்டுகள்தான். இப்போது சொல்லுங்கள். எவ்வளவு காலம் எந்த உணர்வு தேவை? காலம் முழுவதும் மகிழ்ச்சிதானே தேவை. மற்ற உணர்வுகளை தள்ளுங்கள் என்கிறது சனாதன தர்மம். எது நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன் என்பவரை யாரால் தடுக்க முடியும்? இன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கடப்போமே..

சரி, எப்படிதான்  வாழ்வது? கொஞ்சம் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்போமா? " சமூகத்தில் நிலவும் பகைமை, வன்முறை, வெறுப்புணர்ச்சி யாவும் மனித மனத்தின் ஆங்கார வெளிப்பாடுகளே!  காருண்யம் நிரம்பிய உள்ளத்தை
கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும்" என்கிறார். மேலும் "துயரத்தில் - உங்கள் துயரத்தை மட்டுமன்றி உலகத்தின் துயரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அதை கடந்து போக முடியும். துயரத்தின் ஒட்டு மொத்த அர்த்தத்தை புரிந்து கொள்ளும்போது மட்டுமே காருண்யம் உருவாகும்." 
என்றார் ஜே.கே. 

மேலும், "நாம் எப்போதும், யாருக்கேனும் நம்மை நிரூபித்துக் கொண்டே இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். இது தேவையற்ற வீண்வேலை. நாம் நாமாக, நம் குற்றங்குறைகளுடன் பலவீனங்களுடன் நம்மையே ஏற்றுக்கொள்வதும், நம்மை நேசிப்பதும் மிக முக்கிய தேவை" என்பார் ஜே.கே.

"சுயநல வேட்கை உள்ளவனிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது" என்பார். சத்தியமான வார்த்தை.
வாழ்க்கை தத்துவங்களை படிக்க, உணர ஆசைப்பட்டால், மனதை வெறுமையாக்கிக் கொண்டு, ஜே.கே அவர்களின் எழுத்துக்களைப் படியுங்கள்.

நான் படித்தது, பார்த்தது, கேட்டது அனைத்திலும் பொதுவான முக்கிய தத்துவம் ' உலகின் சிறந்த மனிதர்கள் (Awesome Personalities) யார் என்றால் அடுத்தவர்களுக்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள்தான்'. பொருளை, அறிவை, கல்வியை, உழைப்பை, சந்தோஷத்தை எதுவானாலும்.

செல்வம், வசதிகளை அடைய நாம் அடுத்தவரை சார்ந்தே இருக்க வேண்டும். சிறந்த மனிதராகத் திகழ யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

வாழ்க்கையை எளிமையாக வாழும்போது அமைதியும் சந்தோஷமும் இருக்கும். ஆடம்பரமாக, ஆரவாரமாக வாழ நினைக்கும்போது அதற்கேற்ற விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். Life is Simple, We are making it Complicated.

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது "

என்று குறள் எளிமையாக வழிகாட்டுகிறது. வாழ்ந்துதான் பார்ப்போமே!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...