முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே தேடுவேன்? - பணம்

     

"எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை                                 
எங்கே தேடுவேன்?
அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்? "
        - இது 1952 ல் 'பணம்'  என்ற திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடியது. 

இன்றுவரை, அதன் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக, ரூபாய் மதிப்பைப் போல பல மடங்கு பணத்தின் தேவை எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது.

பணம் - மனிதனின் மூச்சுக்காற்றுக்கு அடுத்தபடியாக உயிர் வாழ தேவைப்படுகிறது. அன்றே சொல்லிவிட்டார்கள்- "பணம் இல்லாதவன் பிணம்' என்று. 

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசுமுன் செல்லாதடி"
  - இது பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாட்டு. இதுவும் 1952 ல் வந்த திரைப்படம். பணத்தின் சக்தியை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருப்பார். இதில்

"பிணத்தை
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே" 
என்று வரும். பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவனின் நகைச்சுவை கலந்த அவலக் குரலாக (Black Humour) இது ஒலிக்கும். நடிகர்திலகத்தின் நடிப்பும் நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்..
 (ஒரு முறை யூ டியுபில் இந்த பாடலை கண்டு ரசியுங்கள்.காலத்துக்கும் மறக்க மாட்டீர்கள்)
 பாடல்கள் கீழே. 

சரி, பணத்தை எங்கே தேடுவது? ' பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்று சொல்வார்கள். கொஞ்சம் சிந்தித்தால், 'பணம் யாராவது நமக்கு கொடுத்தால்தான் கிடைக்கும்' என்ற விடை கிடைக்கும். நாம் கொடுக்கும் பொருளுக்கோ, அல்லது சேவைக்கோதான் பணம் கிடைக்கும். அதுவல்லாமல் கிடைக்கும் பணம் தவறான வழியில் வந்ததாக கருதப்படுகிறது. 

கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் வேலைக்குப் போகிறார் என்றால், அவரது சேவைக்கு அந்த நிறுவனம் பணம் கொடுக்கிறது. உடல் உழைப்பாகவோ, மூளை உபயோகித்தோ அவர் அந்த சேவையை வழங்குகிறார். 
அடுத்தவர் வணிகம் செய்கிறார். அவர் கொடுக்கும் பொருளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட சேவை (service) செய்தோ, ஆலோசனையாகவோ( consultant) பணம் பெறலாம்.
இவையல்லாது கிடைக்கும் பணம் எல்லாமே சட்டத்துக்கு புறம்பானது. திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், ஊழல் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

சரி, யாரிடம் பணம் நிறைய சேரும்? எந்ததுறையாக இருந்தாலும் நன்றாக படித்து, அல்லது நன்றாக தொழில் கற்று (Skills Learning) நிறுவனத்தின் நிர்வாகப் பதவிகளுக்கு வருபவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. பணிபுரிவோர் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டேஇருக்க வேண்டியது அவசியமாகிறது. சுந்தர்பிச்சை - கூகிள், சத்ய நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இவர்களைச் சொல்லலாம். சத்ய நாதெள்ளா B.E , M.S , MBA முடித்து சன் மைக்ரோசிஸ்டம் கம்பெனியில் சேர்கிறார். பின்னும் 25 ஆன்லைன் கோர்ஸ்களில் இணைந்து கற்றாராம். என்ன உழைப்பு! (அதான் தலையில் முடி இல்லை ☺☺)

அரசு அதிகாரிகள் இதில் சேராது. அரசுப்பணி என்ற உலகம் தனி.

அடுத்து வணிகம். புதுப்புது உத்திகளோ, தொழில்நுட்பமோ வழங்கினால்தான் அதிக பணம் கிடைக்கிறது. எலான் மஸ்க் நல்ல உதாரணம். இன்றைக்கு உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எப்படி எட்டினார்? புதுப்புது தொழில்நுட்பங்கள். ஜெப் பெசோஸ் அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனையைதான் தொடங்கினார். அவரது ஆரம்ப கால அலுவலகம் ஒரே ஒரு கணினியோடு துவங்கப்பட்டது. இன்று? அமேசான் உலகின் முன்னணி நிறுவனம். காரணம், வியாபார உத்திகள். 

சரி, எல்லோருமே சுந்தர் பிச்சையாகவோ, எலான் மஸ்க் ஆகவோ முடியுமா? கண்டிப்பாக முடியாது. இவ்வுலகில் யாரும் யாராகவும், யார் மாதிரியும் ஆக முடியாது. மேலும் அவர்களும் பணத்தை நோக்கி ஓடியவர்களல்ல. (எலானின் மந்திரமே பணத்தை எண்ணி தொழில் செய்யாதே. புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடி என்பதுதான்) திறமையாலும் தொழில்நுட்பத்தாலும் பணம் அவர்களை நோக்கி வந்தது. நம் முழு கவனமும் (Focus) புதுமைகளில் மட்டுமே இருந்து, குடும்ப சூழலும், புற சூழலும் அமைந்தால் நாமும் பணக்காரர்கள்தான். கலைத்துறையாக இருந்தாலும் அதுதான். 
முடியவில்லையா? பெரு மூச்சு விடுவதை நிறுத்துங்கள்.
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ பழகுங்கள். 

சரி அடுத்து, அரசியல்வாதிகள் எல்லோரும் பணக்காரர்களாக உள்ளனரே, நாமும் அரசியல்வாதியாகிவிடலாமா? ஹலோ, அரசியல் என்பது நாட்டை நிர்வாகம் செய்வதற்காக மக்கள் தேர்வு செய்வது. பணம் சம்பாதிக்க அல்ல. அது சட்டப்படி குற்றம். என்றைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். 

'காசேதான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கைமாறும் பணமே, உன்னைக் கைப்பற்ற துடிக்குது மனமே'

நிறைய பணம் சம்பாதித்தால் வாழ்க்கை சந்தோஷம் தானே? 

அது வேற டாபிக், பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...