முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே தேடுவேன்? - பணம்

     

"எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை                                 
எங்கே தேடுவேன்?
அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்? "
        - இது 1952 ல் 'பணம்'  என்ற திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடியது. 

இன்றுவரை, அதன் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக, ரூபாய் மதிப்பைப் போல பல மடங்கு பணத்தின் தேவை எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது.

பணம் - மனிதனின் மூச்சுக்காற்றுக்கு அடுத்தபடியாக உயிர் வாழ தேவைப்படுகிறது. அன்றே சொல்லிவிட்டார்கள்- "பணம் இல்லாதவன் பிணம்' என்று. 

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசுமுன் செல்லாதடி"
  - இது பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாட்டு. இதுவும் 1952 ல் வந்த திரைப்படம். பணத்தின் சக்தியை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருப்பார். இதில்

"பிணத்தை
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே" 
என்று வரும். பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவனின் நகைச்சுவை கலந்த அவலக் குரலாக (Black Humour) இது ஒலிக்கும். நடிகர்திலகத்தின் நடிப்பும் நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்..
 (ஒரு முறை யூ டியுபில் இந்த பாடலை கண்டு ரசியுங்கள்.காலத்துக்கும் மறக்க மாட்டீர்கள்)
 பாடல்கள் கீழே. 

சரி, பணத்தை எங்கே தேடுவது? ' பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்று சொல்வார்கள். கொஞ்சம் சிந்தித்தால், 'பணம் யாராவது நமக்கு கொடுத்தால்தான் கிடைக்கும்' என்ற விடை கிடைக்கும். நாம் கொடுக்கும் பொருளுக்கோ, அல்லது சேவைக்கோதான் பணம் கிடைக்கும். அதுவல்லாமல் கிடைக்கும் பணம் தவறான வழியில் வந்ததாக கருதப்படுகிறது. 

கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் வேலைக்குப் போகிறார் என்றால், அவரது சேவைக்கு அந்த நிறுவனம் பணம் கொடுக்கிறது. உடல் உழைப்பாகவோ, மூளை உபயோகித்தோ அவர் அந்த சேவையை வழங்குகிறார். 
அடுத்தவர் வணிகம் செய்கிறார். அவர் கொடுக்கும் பொருளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட சேவை (service) செய்தோ, ஆலோசனையாகவோ( consultant) பணம் பெறலாம்.
இவையல்லாது கிடைக்கும் பணம் எல்லாமே சட்டத்துக்கு புறம்பானது. திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், ஊழல் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

சரி, யாரிடம் பணம் நிறைய சேரும்? எந்ததுறையாக இருந்தாலும் நன்றாக படித்து, அல்லது நன்றாக தொழில் கற்று (Skills Learning) நிறுவனத்தின் நிர்வாகப் பதவிகளுக்கு வருபவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. பணிபுரிவோர் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டேஇருக்க வேண்டியது அவசியமாகிறது. சுந்தர்பிச்சை - கூகிள், சத்ய நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இவர்களைச் சொல்லலாம். சத்ய நாதெள்ளா B.E , M.S , MBA முடித்து சன் மைக்ரோசிஸ்டம் கம்பெனியில் சேர்கிறார். பின்னும் 25 ஆன்லைன் கோர்ஸ்களில் இணைந்து கற்றாராம். என்ன உழைப்பு! (அதான் தலையில் முடி இல்லை ☺☺)

அரசு அதிகாரிகள் இதில் சேராது. அரசுப்பணி என்ற உலகம் தனி.

அடுத்து வணிகம். புதுப்புது உத்திகளோ, தொழில்நுட்பமோ வழங்கினால்தான் அதிக பணம் கிடைக்கிறது. எலான் மஸ்க் நல்ல உதாரணம். இன்றைக்கு உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எப்படி எட்டினார்? புதுப்புது தொழில்நுட்பங்கள். ஜெப் பெசோஸ் அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனையைதான் தொடங்கினார். அவரது ஆரம்ப கால அலுவலகம் ஒரே ஒரு கணினியோடு துவங்கப்பட்டது. இன்று? அமேசான் உலகின் முன்னணி நிறுவனம். காரணம், வியாபார உத்திகள். 

சரி, எல்லோருமே சுந்தர் பிச்சையாகவோ, எலான் மஸ்க் ஆகவோ முடியுமா? கண்டிப்பாக முடியாது. இவ்வுலகில் யாரும் யாராகவும், யார் மாதிரியும் ஆக முடியாது. மேலும் அவர்களும் பணத்தை நோக்கி ஓடியவர்களல்ல. (எலானின் மந்திரமே பணத்தை எண்ணி தொழில் செய்யாதே. புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடி என்பதுதான்) திறமையாலும் தொழில்நுட்பத்தாலும் பணம் அவர்களை நோக்கி வந்தது. நம் முழு கவனமும் (Focus) புதுமைகளில் மட்டுமே இருந்து, குடும்ப சூழலும், புற சூழலும் அமைந்தால் நாமும் பணக்காரர்கள்தான். கலைத்துறையாக இருந்தாலும் அதுதான். 
முடியவில்லையா? பெரு மூச்சு விடுவதை நிறுத்துங்கள்.
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ பழகுங்கள். 

சரி அடுத்து, அரசியல்வாதிகள் எல்லோரும் பணக்காரர்களாக உள்ளனரே, நாமும் அரசியல்வாதியாகிவிடலாமா? ஹலோ, அரசியல் என்பது நாட்டை நிர்வாகம் செய்வதற்காக மக்கள் தேர்வு செய்வது. பணம் சம்பாதிக்க அல்ல. அது சட்டப்படி குற்றம். என்றைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். 

'காசேதான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கைமாறும் பணமே, உன்னைக் கைப்பற்ற துடிக்குது மனமே'

நிறைய பணம் சம்பாதித்தால் வாழ்க்கை சந்தோஷம் தானே? 

அது வேற டாபிக், பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...