முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே செல்லும் இந்தப்பாதை?

 எங்கே செல்கிறேன்?

எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை.(டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected.

இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan)', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந்த ஸ்டியரிங்க பிடிங்கப்பானு யார்கிட்டவாது கொடுக்கலாமென்று அடிக்கடி தோன்றும். ஆனால் இதுவரை யாரும் கிடைக்கவில்லை☺☺.

எனக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்த விஷயங்கள் மூன்று.1.அறிவுத் தேடல், 2.பயணம், 3.பொது வாழ்க்கை. இது மூன்றும் எனது டிஎன்ஏ வில் உள்ளது போல. நானாக விரும்பிச்செல்லாவிட்டாலும் வாழ்க்கை அதை நோக்கியே செல்கிறது. நான் எப்போதெல்லாம் வாழ்க்கையில் சிக்கலை  சந்தித்து  விடை தெரியாது நிற்கின்றேனோ (bottle neck) அப்போதெல்லாம் கடவுள் பிரேக்கை போட்டு ஸ்டியரிங்கை அந்தப் பக்கம் திருப்புகிறார் என்று தெரியும். அந்த திருப்பத்தில் வாழ்க்கை பிரகாசமாக செல்லும். 

அடுத்து வரும் காலத்தை நான் சமுதாயத்துக்கு திருப்பி செலுத்தும் காலமாகத்தான் பார்க்கிறேன். அதை என் பக்கெட் லிஸ்டில் (Bucket List) முதலாவதாக வைத்துள்ளேன். நான் சார்ந்துள்ள பொறியியல் துறைக்கு வெப் போர்டல் web portal துவக்க உள்ளேன். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் சிவில் இஞ்சினியரிங் போர்டல்கள் உள்ளன. இருந்தாலும் என்னிடம் 10 GB அளவுக்கு டேடா Data உள்ளது. அதை பகிரவேண்டும். மேலும் சில  திட்டங்களும் உள்ளன. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியரிங் துறை தரமானதாக, முக்கியமாக மதிப்பு மிக்கதாக ஆக்க, நண்பர்களோடு இணைந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளேன்.

55 வயதைக் கடந்த பின்தான், SPB பாடியது போல, " போகும் பாதை தூரமே: வாழும் காலம் கொஞ்சமே" என்று பாடத் தோன்றுகிறது. உயிர் இருக்கும்வரை பயணித்துக் கொண்டே இருந்தால்தான் உடல், உள்ளம், வாழ்க்கை மூன்றும் செ(ம்)மையாக இருக்கும். 

"நீ நதி போல ஓடிக்கொண்டிரு" என்பதுதான் என்றும் என் மந்திரம்.

பயணிப்போம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி  இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல .. அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா .. அவ என்ன சொன்னாலும் பிடிக்கும் , எது பேசினாலும் பிடிக்கும் , பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும் , கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான் .   ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து , நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு , நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா ..   சாப்பிட்டியா என்ன பண்றே   பைக் பார்த்து கவனமா ஓட்டு உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா .. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா .. கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா .. சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா .. பல காயங்களுக்கு மருந்து போடுவா , சில காயங்களுக்கு அவளே காரணமாவா .. இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா .. அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா .. ஒரு பெ...