முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப் பார்வை - த்ரிஷ்யம் -2 (மலையாளம்)

 நல்ல படம் பார்க்கணுமா? இதோ!

பொதுவாக, சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதுமே முதல் படம்தான் அசலான புதிய கதையோடு
சிறப்பாகவும் அமைந்திருக்கும் என்பது எனது கருத்து. முதல் பாக வெற்றியை வைத்து மீண்டும் கல்லா கட்டவே இரண்டாம் பாகம் எடுப்பார்கள். (பாகுபலி போன்று ஒரே கதையை பாகங்களாக பிரித்து எடுப்பது வேறு) அந்த வகையில் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்தபோது, முதல் பாகத்தின் இனிய நினைவுகளையும் சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. போதாக்குறைக்கு, ஜீத்து ஜோசப்பின் அடுத்தடுத்த படங்களும் அவவளவு சிறப்பாக இல்லை.

ஆனால், 2013 ல் வந்த முதல் பாகத்தின் அச்சு மாறாமல் அதன் தொடர்ச்சியாகவே கதை நகர்கிறது. அதே பரபரப்போடு, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு பார்த்து ரசிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியுள்ளார் ஜீத்து. முதல் பாகத்திற்கு 6 வருடத்திற்கு பின் கதை தொடங்குகிறது. முதற் காட்சியிலேயே அந்த பரபரப்பை கொண்டுவந்துவிடுகிறார். ஜார்ஜ் குட்டி இப்போது சற்று வசதியானவராக, சினிமா தியேட்டர் ஓனராக வருகிறார். சினிமா தயாரிக்கும் முயற்சியிலும் இருக்கிறார். ஆனால் அவர்களது மனத்தில் பயம் அப்படியே இருக்கிறது. இதற்கு மேல் சொன்னால் Spoiler ஆகிவிடும். படம் பார்க்காதவர்களுக்காக அப்படியே விட்டுவிடுகிறேன்.

முதல் அரை மணி நேரத்தில் கதை மெதுவாகவே நகர்கிறது. ஆனால் அனைத்து காட்சிகளுமே இறுதியில் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சி இல்லை. அவ்வளவு நேர்த்தியாக கதை எழுதியுள்ளார் ஜீத்து. ஒரு நல்ல திரைப்படத்திற்கு நல்ல எழுத்தாளர் அவசியம். ஹாலிவுட்டில் கூட எழுத்தாளருக்குதான் மதிப்பு, தமிழ் சினிமாவைத் தவிர. அதே எழுத்தாளர் நல்ல இயக்குநராகவும் இருந்துவிட்டால் நல்ல திரைப்படம் கிடைக்கும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம். 

பற்பல திருப்பங் களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று சினிமாத் தனம் இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே உள்ளது. மோகன்லாலின் யதார்த்தமான,மிகையில்லாத நடிப்பு கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. முரளி கோபி, கணேஷ் குமார் உடன் அனைத்து கதாபாத்திரங்களும் முதல் பாகத்தில் உள்ளது போலவே நன்றாக நடித்துள்ளனர். கேமெராவும் இசையும் இன்னும் பக்க பலம். 

எந்த அடிதடி, வயலன்ஸ் இல்லாமல் குடும்பத்தோடு ரசிக்க நல்ல த்ரில்லர். 

முதல் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. இரண்டாம் பாகமும் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் முதல் பாகம் 2019 ல் சீனாவிலும் ரீமேக்கானது தெரியுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... - சுஜாதா சிறுகதை (1965)

  மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை         - சுஜாதா மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது. இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல). மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள். எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு. மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .  கதையின் பெயர்:  மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... "டிட்டோ" என்றே...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....