முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப் பார்வை - த்ரிஷ்யம் -2 (மலையாளம்)

 நல்ல படம் பார்க்கணுமா? இதோ!

பொதுவாக, சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதுமே முதல் படம்தான் அசலான புதிய கதையோடு
சிறப்பாகவும் அமைந்திருக்கும் என்பது எனது கருத்து. முதல் பாக வெற்றியை வைத்து மீண்டும் கல்லா கட்டவே இரண்டாம் பாகம் எடுப்பார்கள். (பாகுபலி போன்று ஒரே கதையை பாகங்களாக பிரித்து எடுப்பது வேறு) அந்த வகையில் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்தபோது, முதல் பாகத்தின் இனிய நினைவுகளையும் சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. போதாக்குறைக்கு, ஜீத்து ஜோசப்பின் அடுத்தடுத்த படங்களும் அவவளவு சிறப்பாக இல்லை.

ஆனால், 2013 ல் வந்த முதல் பாகத்தின் அச்சு மாறாமல் அதன் தொடர்ச்சியாகவே கதை நகர்கிறது. அதே பரபரப்போடு, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு பார்த்து ரசிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியுள்ளார் ஜீத்து. முதல் பாகத்திற்கு 6 வருடத்திற்கு பின் கதை தொடங்குகிறது. முதற் காட்சியிலேயே அந்த பரபரப்பை கொண்டுவந்துவிடுகிறார். ஜார்ஜ் குட்டி இப்போது சற்று வசதியானவராக, சினிமா தியேட்டர் ஓனராக வருகிறார். சினிமா தயாரிக்கும் முயற்சியிலும் இருக்கிறார். ஆனால் அவர்களது மனத்தில் பயம் அப்படியே இருக்கிறது. இதற்கு மேல் சொன்னால் Spoiler ஆகிவிடும். படம் பார்க்காதவர்களுக்காக அப்படியே விட்டுவிடுகிறேன்.

முதல் அரை மணி நேரத்தில் கதை மெதுவாகவே நகர்கிறது. ஆனால் அனைத்து காட்சிகளுமே இறுதியில் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சி இல்லை. அவ்வளவு நேர்த்தியாக கதை எழுதியுள்ளார் ஜீத்து. ஒரு நல்ல திரைப்படத்திற்கு நல்ல எழுத்தாளர் அவசியம். ஹாலிவுட்டில் கூட எழுத்தாளருக்குதான் மதிப்பு, தமிழ் சினிமாவைத் தவிர. அதே எழுத்தாளர் நல்ல இயக்குநராகவும் இருந்துவிட்டால் நல்ல திரைப்படம் கிடைக்கும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம். 

பற்பல திருப்பங் களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று சினிமாத் தனம் இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே உள்ளது. மோகன்லாலின் யதார்த்தமான,மிகையில்லாத நடிப்பு கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. முரளி கோபி, கணேஷ் குமார் உடன் அனைத்து கதாபாத்திரங்களும் முதல் பாகத்தில் உள்ளது போலவே நன்றாக நடித்துள்ளனர். கேமெராவும் இசையும் இன்னும் பக்க பலம். 

எந்த அடிதடி, வயலன்ஸ் இல்லாமல் குடும்பத்தோடு ரசிக்க நல்ல த்ரில்லர். 

முதல் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. இரண்டாம் பாகமும் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் முதல் பாகம் 2019 ல் சீனாவிலும் ரீமேக்கானது தெரியுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...