முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப் பார்வை - த்ரிஷ்யம் -2 (மலையாளம்)

 நல்ல படம் பார்க்கணுமா? இதோ!

பொதுவாக, சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதுமே முதல் படம்தான் அசலான புதிய கதையோடு
சிறப்பாகவும் அமைந்திருக்கும் என்பது எனது கருத்து. முதல் பாக வெற்றியை வைத்து மீண்டும் கல்லா கட்டவே இரண்டாம் பாகம் எடுப்பார்கள். (பாகுபலி போன்று ஒரே கதையை பாகங்களாக பிரித்து எடுப்பது வேறு) அந்த வகையில் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்தபோது, முதல் பாகத்தின் இனிய நினைவுகளையும் சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. போதாக்குறைக்கு, ஜீத்து ஜோசப்பின் அடுத்தடுத்த படங்களும் அவவளவு சிறப்பாக இல்லை.

ஆனால், 2013 ல் வந்த முதல் பாகத்தின் அச்சு மாறாமல் அதன் தொடர்ச்சியாகவே கதை நகர்கிறது. அதே பரபரப்போடு, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு பார்த்து ரசிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியுள்ளார் ஜீத்து. முதல் பாகத்திற்கு 6 வருடத்திற்கு பின் கதை தொடங்குகிறது. முதற் காட்சியிலேயே அந்த பரபரப்பை கொண்டுவந்துவிடுகிறார். ஜார்ஜ் குட்டி இப்போது சற்று வசதியானவராக, சினிமா தியேட்டர் ஓனராக வருகிறார். சினிமா தயாரிக்கும் முயற்சியிலும் இருக்கிறார். ஆனால் அவர்களது மனத்தில் பயம் அப்படியே இருக்கிறது. இதற்கு மேல் சொன்னால் Spoiler ஆகிவிடும். படம் பார்க்காதவர்களுக்காக அப்படியே விட்டுவிடுகிறேன்.

முதல் அரை மணி நேரத்தில் கதை மெதுவாகவே நகர்கிறது. ஆனால் அனைத்து காட்சிகளுமே இறுதியில் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சி இல்லை. அவ்வளவு நேர்த்தியாக கதை எழுதியுள்ளார் ஜீத்து. ஒரு நல்ல திரைப்படத்திற்கு நல்ல எழுத்தாளர் அவசியம். ஹாலிவுட்டில் கூட எழுத்தாளருக்குதான் மதிப்பு, தமிழ் சினிமாவைத் தவிர. அதே எழுத்தாளர் நல்ல இயக்குநராகவும் இருந்துவிட்டால் நல்ல திரைப்படம் கிடைக்கும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம். 

பற்பல திருப்பங் களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று சினிமாத் தனம் இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே உள்ளது. மோகன்லாலின் யதார்த்தமான,மிகையில்லாத நடிப்பு கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. முரளி கோபி, கணேஷ் குமார் உடன் அனைத்து கதாபாத்திரங்களும் முதல் பாகத்தில் உள்ளது போலவே நன்றாக நடித்துள்ளனர். கேமெராவும் இசையும் இன்னும் பக்க பலம். 

எந்த அடிதடி, வயலன்ஸ் இல்லாமல் குடும்பத்தோடு ரசிக்க நல்ல த்ரில்லர். 

முதல் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. இரண்டாம் பாகமும் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் முதல் பாகம் 2019 ல் சீனாவிலும் ரீமேக்கானது தெரியுமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...