முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவிலே கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு பார்வை - 2


நார்மன் வின்சென்ட் ப்யல் என்பவரின்' நேர்மறை எண்ணங்களின் சக்தி' (The Power of Positive Thinking - Norman Vincent Peale) என்ற சுய உதவி புத்தகம்  வெளியான காலத்திலேயே கல்வியாளர்கள் பலராலும் எதிர்க்கப்பட்டது. அமெரிக்க மந்திரியாகவும், பாஸ்டராகவும் இருந்த நார்மன், மனோதத்துவத்தில் ஹிப்னாசிஸ் வழி முறைகளை, பைபிள் வழியில், பல்வேறு நபர்களின் வாழ்க்கை சம்பவங்களை கலந்து எழுதியிருப்பார். அவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் மனச்சிதைவுதான் ஏற்படும் என்ற கடுமையான எதிர்ப்புகளுக்கிடையேயும் அந்தப் புத்தகம் விற்றுக் கொண்டேதான் இருந்தது.

எம். ஆர் கோப்மேயர் என்பவர், ' எப்படி சீக்கிரம் பணக்காரர் ஆவது, இதோ உதவி, நீங்கள் விரும்பியது எதுவானாலும் அடைவது எப்படி' (How you can get Richer, Quicker, Here is Help, How to get whatever you want) புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்' The Success foundation' என்ற நிறுவனத்தை நிறுவி 'வெற்றி ஆலோசகராக'(Success Counselor) (!)  இருந்தார்!

நமது நாட்டிலும் விளம்பரப்படுத்தி, இந்தப் புத்தகங்களுக்கு. KFC அளவுக்கு வியாபாரம் நடந்து கொண்டேதான் உள்ளது.

இவர்களைப் போன்றே எம்.எஸ் உதயமூர்த்தி என்ற தமிழர், அமெரிக்காவில் பணிபுரிந்து தாயகம் திரும்பியவர், ' உன்னால் முடியும் தம்பி,நம்பு', 'எண்ணங்கள்' போன்ற புத்தகங்களை எழுதி தமிழ்நாட்டில் பிரபலமானார். (இளைஞர்களிடத்தில் வெகுவாக பிரபலமானதால் கட்சியெல்லாம் தொடங்கினார்)

நாவலாசிரியர் சிவசங்கரியின் 'சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' குறிப்பிடத்தக்க புத்தகம்.

இப்போதும் ஆன்லைன் மீடியா கோலோச்சும் காலத்தில் சுய முன்னேற்றம், சுய உதவி, தன்னம்பிக்கை, பணக்காரர் ஆக, பிரபலமாக ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

'Chicken soup for the soul' (தமிழில்' உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப்') தொடர் புத்தகங்களாக நூற்றுக்கணக்கில் (இதுவரை 250) வெளியிட்டு உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேலாக விற்பனையாகிறது. இந்த நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டு கோடிக்கணக்கில் இதன் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. மக்களுக்கு அறிவுத் தேடல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். 
(நான் இந்த புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால், 2 பக்கம் முடிவதற்குள் தூக்கம் வந்துவிடும்)

சரி, இப்போது இளைஞர்களிடம் பிரபலமாக உள்ள சில புத்தகங்களைப் பார்க்கலாம். (Hai Dude,  Have you read these books?)

Rich Dad Poor Dad - Robert Kyosaki (தமிழில் - பணக்காரத் தந்தை  ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி) 
1997ல் கியோஸாகி எழுதி பிரபலமானது. 'ஆம்வே' (Amway - MLM) மூலமாகவெல்லாம் மார்க்கெட்டிங் செய்தார்கள். வியாபாரம் களைகட்ட, இன்று வரை 2 கோடி புத்தகங்கள் விற்றுள்ளார்கள். உடனே  பண நிர்வாக கல்வி மற்றும் பயிற்சி (Financial Education and Training, Seminar franchises) ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தார்கள். இப்போது இவர் நெட்வொர்த் 100 மில்லியன் டாலர்கள். சூப்பர்ல? சரி, புத்தகத்தில் என்ன இருக்கிறது, பார்க்கலாம்.

இவரது சொந்தத் தந்தை பி.எச்.டி படித்து டாக்டரேட் பெற்றவர்,அறிவு கூர்மையானவர்.
ஆனால் ஏழை. அவரது நண்பரின் தந்தை எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர். ஆனால் பணக்காரர். இவர்கள் இருவருக்கும் உள்ள சிந்தனைக்கும் தனக்கு கூறிய அறிவுரைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுகிறார்.
ஏழைத் தந்தை, 'தீயவை எல்லாவற்றுக்கும் காரணம் பணத்தின் மீதான அளவு கடந்த மோகம்தான். பணவிஷயங்களில் பாதுகாப்பாக நடந்து கொள். சவாலான விஷயங்களில் இறங்காதே. கடன் வாங்கியாவது வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு (Asset)செய்.' என்கிறார்.

பணக்காரத் தந்தையோ, 'தீயவை எல்லாவற்றுக்கும் காரணம் பணம் இல்லாததுதான். பண விஷயங்களில் சவாலான விஷயங்களை நிர்வகிக்க கற்றுக் கொள். முதலீடு எப்போதும் கடன் சுமையாக (Liability) இருக்க கூடாது' என்கிறார்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதற்கும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதற்கும் , நடுத்தர வர்க்கத்தினர் கடன்களில் சிக்கி தவிப்பதற்கும் பணத்தைப் பற்றி அவர்கள் வீடுகளில் சொல்லித் தருவதுதான். பள்ளிகளில் பணத்தைப் பற்றி சொல்லித்தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
வாழ்க்கையில் நொடிந்து போயிருப்பது தற்காலிகமானது. ஆனால் ஏழையாய் இருப்பது நிரந்தரமானது.
  • பணக்காரர்கள் பணத்தை தங்களுக்காக வேலை செய்ய வைக்கிறார்கள். ஏழைகள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.
  • நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவை தக்க வைக்கிறீர்கள் என்பது முக்கியம்.
  • பணத்தின் மீதான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு சொத்து என் சட்டைப்பைக்குள் பணத்தைப் போடுகிறது. ஒரு கடன் என் சட்டைப்பைக்குள் உள்ள பணத்தை எடுக்கிறது.
  • எப்போதும் சொத்துக்களை அதிகரியுங்கள்
  • வரி என்பது அரசாங்கத்திற்காக உழைப்பது. வரி அனுகூலங்களைப் பெறுவதிலும் , சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதிலும் கவனம் செலுத்துங்கள்.
  • பணத்திற்காக வேலை செய்யாதீர்கள். கற்றுக் கொள்வதற்காக வேலை செய்யுங்கள்.
  • பயம், சந்தேகம், சோம்பேறித்தனம், மோசமான பழக்கங்கள், ஆணவம் ஆகிய தடைகளிலிருந்து மீளுங்கள்.
  • குழந்தைகள் வருங்காலத்தில் பண நிர்வாகத்தில் வெற்றி பெற பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுங்கள்.
மேலும் இதில் வீடு, மனைகள் வாங்குவது, முதலீடுகள், வருமானம், செலவீடுகளைப் பற்றி அலசுகிறார் ஆசிரியர்.
பணக்காரராக வேண்டுமா? வாங்கி படியுங்கள்.

Who moved my Cheese - Spencer Johnson ( தமிழில் -  என் சீஸை நகர்த்தியது யார் - ஸ்பென்சர் ஜான்சன்)

ஒரு வலைப்பின்னலான பாதை  அல்லது மேஸ் (Maze), அதில் வாழும் 2 எலிகள், 2 எலி சைஸ் மனிதர்கள், நால்வரும் சீஸ் நிறைய இருக்கும் ஒரு இடத்தை கண்டுபிடித்து
உண்டு அருகில் வாழுகின்றனர். எலிகள் தினமும் சீஸை தின்றுவிட்டு, அடுத்து சீஸ் இருக்கும் இடத்தை தேடி அலையும். மனிதர்கள் தின்றுவிட்டு தூங்குகின்றனர். திடீரென ஒருநாள் அங்கு சீஸைக் காணோம். எலிகள் ஏற்கனவே தேடி பழக்கப்பட்டதால், அடுத்து சீஸ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, செட்டில் ஆகின்றன. மனிதர்கள், எப்படி காணாமல் போயிற்று என்று ஒருவருக்கொருவர்  சண்டையிட்டு கொண்டும், கண்டிப்பாக அங்கேயே திரும்ப சீஸ் கிடைக்கும் என்று தங்கி பட்டினியில் கிடக்கின்றனர். ஒரு நபர் அதற்கு மேல் தங்கமுடியாது என்று வேறு இடம் தேடி, எலிகள் இருக்கும் இடத்தை அடைகிறார். போகும் வழியெங்கும்  சுவர்களில் மற்ற நபருக்காக பாதையை குறித்து விட்டு பாடத்தையும் எழுதிவைக்கிறார்.
அவ்வளவுதாங்க கதை. இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன?
  • மாற்றம் ஒன்றே மாறாதது. 
  • மாற்றத்தை எதிர்பாருங்கள்
  • மாற்றங்களை எச்சரிக்கையுடன் கண்காணியுங்கள்
  • சீக்கிரமாக மாற்றங்களுக்கு தயாராகுங்கள்.
  • மாறுங்கள்
  • மாற்றங்களை அனுபவியுங்கள்
  • பயத்தை விலக்கினால் சந்தோஷத்தை உணரலாம்
  • நீங்கள் மாறவில்லையென்றால், உலகம் உங்களை மறந்துவிடும்.
சின்ன கதை, மாற்றம் எனும் தத்துவம், அதுக்கு விளக்கம், கொஞ்ச பக்கங்கள்(76). ஆனால் வியாபாரம், 3 கோடி அனைத்து மொழிகளிலும் சேர்த்து. Hmmm......

(வசதியான இடத்தில்  (Comfort zone) செட்டில் ஆகிடக் கூடாதுங்கிறதுக்கு சுடுதண்ணீரில் போட்ட தவளைக் கதை சொல்வார்கள்!)

அடுத்த கட்டுரையில் மேலும் சில புத்தகங்களைப் பற்றி காணலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...