முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிட்காயின் மைனிங் எப்படி செயல்படுகிறது?

 வியக்கவைக்கும் டெக்னாலஜி!

பிட்காயின் ஒரு கிரிப்டோகரன்சி. கிரிப்டோக்ராபி (Cryptography) தெரியுமல்லவா? முக்கிய ரகசியங்களைப் பாதுகாக்க, அதை ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டி, அந்த பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்க ஒரு புதிர் (Puzzle) கொடுப்பார்கள். நீங்கள் அந்த புதிருக்கான விடையைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டைப் பெற்று திறக்க வேண்டும். The Da Vinci Code படத்தில் வருமே. அதுதான். அதே டெக்னாலஜியை கிரிப்டோகரன்சியை உருவாக்க பயன்படுத்துகின்றனர்.

Cryptographic Hash Function என்ற வழிமுறையில் (Algorithm) பெரிய டேட்டாக்களைக் கொடுத்து, 64 இலக்க ஹேஷ் (Hash) களாகப் பெறுவார்கள். அதாவது அவர்கள்
கொடுக்கும் கணிதப்புதிரை ( Mathematical Puzzle) வைத்து பிட்காயினுக்கான ஹேஷைக் கண்டுபிடிக்கவேண்டும் (Proof of work). அதிகமான பேர்கள் கண்டுபிடிக்க இறங்கினால் கடினமான புதிர்களாக வரும். அதேபோல் ஆரம்ப காலத்தில் எளிமையாகவும், இப்போது 88% பிட்காயின்கள் வெளியான பிறகு கடினமாக இருக்கும். கடினம் என்றால் கண்டுபிடிக்கும் கால அளவு அதிகமாகும். 

இந்த செயல்
GPU (Graphic Processing Unit)  அல்லது ASIC (Application Specific Integrated Circuit) மூலமாக செய்யப்படும். நாம் வீடியோ கேம் விளையாட கம்யூட்டரில் Ge Force, Radeon போன்ற Graphics Card போடுவோமே, அதுதான். 
பிட்காயின் மைனிங் அதிக அளவில் நடப்பதால், இந்த கார்டுகளுக்கெல்லாம் நல்ல டிமாண்ட். விலைகளும் ஏறிவிட்டன.

இந்த மைனிங், கிரிப்டோக்ராபியில் Hash Function Double SHA256 மூலமாகச் செயல்படுகிறது. ஒரு பிட்காயன் ஹேஷை க் கண்டுபிடிக்க பல கோடி (2.7 Quadrillion) டேட்டாக்கள் உள்ளிடப்படுகின்றன. ஒரு காயினைக் கண்டுபிடிக்க 72 TW எலக்ட்ரிசிட்டி செலவாகிறது. மொத்த செலவு இன்றைய மதிப்பில் 15,000 முதல் 20000 டாலர்கள். கனடா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் கரண்ட் செலவு கம்மி என்று
மைனர்கள் (Miners) அங்கே அதிகம் செல்வதாகக் கூறுகிறார்கள். இப்போது 10 நிமிடத்திற்கு ஒரு பிட்காயின் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 900. அவ்வளவுதான்.
நீங்கள் மைனிங் செய்ய GPU உடன் 3GB RAM லேப்டாப் இருந்தால் போதும். இப்போது ஆன்ட்ராய்டு மொபைலிலும் மைனிங் வசதி வந்துவிட்டது.

மைனர்கள் பலர் ஒன்று சேர்ந்து, ஒரு நெட் வொர்க்காக மைனிங் செய்வதும் உண்டு. கரண்ட் செலவு, அது போல் கிடைக்கும் பிட்காயினையும்  பிரித்துக் கொள்வார்கள். இதற்கு மைனிங் பூல் என்று பெயர். Slush Pool தான் முதலாவது பூல். இப்போது AntPool, Poolin, F2 Pool போன்று நிறைய உள்ளன. 

Hash Sample
பிட்காயின்கள் பிளாக்குகளாகத்தான் மைனிங் செய்யப்படும். 64 இலக்க ஹேஷை கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு பிளாக் (Block) வழங்கப்படும். ஆரம்பத்தில் ஒரு ப்ளாக்குக்கு 50 பிட்காயின்கள் வழங்கப்பட்டன. நான்காண்டுகளுக்கு ஒரு முறை இந்த எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. 2012 ல் ஒரு ப்ளாக்குக்கு 25 பிட்காயின்கள், 2016 ல் ஒரு ப்ளாக்குக்கு 12.5 பிட்காயின்கள், இப்போது ஒரு ப்ளாக்குக்கு 6.25 பிட்காயின்கள். கண்டுபிடிக்கப்பட்ட ப்ளாக்குகளை லெட்ஜரில் பதிவிடுவார்கள். அந்த லெட்ஜர் தான் ப்ளாக் செயின் (Block Chain).

ப்ளாக் செயின் (Block Chain)
கண்டுபிடிக்கப்படும் ப்ளாக்குகள் ஹேஷ் பாயிண்டர் மூலம் முந்தின ப்ளாக்குடன்
இணைக்கப்பட்டு, நேர முத்திரையிடப்பட்டு, ப்ளாக் செயினில் பதியப்படுகிறது. இந்த ப்ளாக் செயின் டேட்டா, பிட்காயின் வைத்துள்ள அனைவருக்கும் அளிக்கப்படுகிறது (Open Distributed Ledger). மேலும், பிட்காயின் மொத்த பரிமாற்றங்கள்- வாங்குதல், விற்றல் அனைத்தும் பதிவாகிறது. இந்தத் தகவல்களை ஹேக் செய்யவோ, திருத்தவோ முடியாது என்பதுதான் சிறப்பம்சம்.

வாலட் (Wallet)
பிட்காயினை பாதுகாக்கவும், பரிமாற்றங்களுக்கும், வாலட்கள் பயன்படுகின்றன. பிட்காயினுடன் Public Key, Private Key இரண்டும் வழங்கப்படும். Public Key, ப்ளாக் செயின் லெட்ஜரில் நுழைய உதவுகிறது. Private Key மூலமாகத்தான் பிட்காயினை வாங்கவோ, விற்கவோ முடியும். இந்த சாவியையும் பிட்காயின் அட்ரஸையும் வாலட்டில்தான் வைத்திருக்கவேண்டும். Private Key திருடப்பட்டால், அவ்வளவுதான், நமது பிட்காயின்கள் மாற்றப்பட்டு விடும். பிட்காயின் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிக்கமுடியாது. வெறும் எண்கள் மட்டுமே இருக்கும். இதனால்தான் பிட்காயின் முதலில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு Dark Web, Deep Web மூலமாக பயன்படுத்தப்பட்டது.

Initial Coin Offering (ICO)
கிரிப்டோ கரன்சி துவக்கும் நிறுவனங்கள் IPO போன்று, நிதி திரட்ட, ICO அறிவிக்கின்றன.இது வெறும் முதலீடு. இதில் முதலீடு செய்தால், நிறுவனத்தில் பங்குதாரராகவோ, கரன்சியாகவோ, டோக்கனாகவோ பெற்றுக் கொள்ள முடியும். டோக்கன்கள், கேசினோ டோக்கன்கள்போலத்தான். ஏதாவது வாங்க உபயோகப்படும். 

கிரிப்டோகரன்சியில் நிறைய அபாயங்களும், சந்தேகங்களும், சர்ச்சைகளும் இருந்தாலும், அதன் டெக்னாலஜி வியக்கவைக்கக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பிட்காயின் வெள்ளை அறிக்கை, மேலும் விவரங்கள் அறிய : www.bitcoin.org

Courtesy
Images: Google, 
investopedia.com







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...