முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது கெடும்?

 வாசித்ததில் நேசித்தது!

தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புபவர்கள் துவங்க வேண்டியது ஔவையாரிடம் இருந்துதான்! அவரளவுக்கு எளிமையாக, வாழ்வின் நெறிகளையும், ஒழுக்கமாக வாழ வழிகளையும் கூறியவர்கள் யாருமில்லை.

இதைச் செய்யாதே என்று சொல்லாமல், இதைச் செய்தால் கெட்டுவிடும் என்று வலியுறுத்துவது சிறந்த நடை. அனைவரும் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள். படித்து பயனுறுங்கள்.

எது கெடும்?

  • v  பாராத பயிரும் கெடும்.
  • v  பாசத்தினால் பிள்ளை கெடும்
  • v  கேளாத  கடனும் கெடும்.
  • v  கேட்கும்போது உறவு கெடும்.
  • v  தேடாத செல்வம் கெடும்.
  • v  தெகிட்டினால் விருந்து கெடும்.
  • v  ஓதாத கல்வி கெடும்.
  • v  ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
  • v  சேராத உறவும் கெடும்.
  • v  சிற்றின்பன் பெயரும் கெடும்.
  • v  நாடாத நட்பும் கெடும்.
  • v  நயமில்லா சொல்லும் கெடும்.
  • v  கண்டிக்காத பிள்ளை கெடும்.
  • v  கடன்பட்டால் வாழ்வு கெடும்.
  • v  பிரிவால் இன்பம் கெடும்.
  • v  பணத்தால் அமைதி கெடும்.
  • v  சினமிகுந்தால் அறமும் கெடும்.
  • v  சிந்திக்காத செயலும் கெடும்.
  • v  சோம்பினால் வளர்ச்சி கெடும்.
  • v  சுயமில்லா வேலை கெடும்.
  • v  மோகித்தால் முறைமை கெடும்.
  • v  முறையற்ற உறவும் கெடும்.
  • v  அச்சத்தால் வீரம் கெடும்.
  • v  அறியாமையால் முடிவு கெடும்.
  • v  உழுவாத நிலமும் கெடும்.
  • v  உழைக்காத உடலும்  கெடும்.
  • v  இறைக்காத கிணறும் கெடும்.
  • v  இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
  • v  இல்லாலில்லா வம்சம் கெடும்.
  • v  இரக்கமில்லா மனிதம் கெடும்.
  • v  தோகையினால் துறவு கெடும்.
  • v  துணையில்லா வாழ்வு கெடும்.
  • v  ஓய்வில்லா முதுமை கெடும்.
  • v  ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
  • v  அளவில்லா ஆசை கெடும்.
  • v  அச்சப்படும் கோழை கெடும்.
  • v  இலக்கில்லா பயணம் கெடும்.
  • v  இச்சையினால் உள்ளம் கெடும்.
  • v  உண்மையில்லா காதல் கெடும்.
  • v  உணர்வில்லாத இனமும் கெடும்.
  • v  செல்வம்போனால் சிறப்பு கெடும்.
  • v  சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
  • v  தூண்டாத திரியும் கெடும்.
  • v  தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
  • v  காய்க்காத மரமும் கெடும்.
  • v  காடழிந்தால் மழையும் கெடும்.
  • v  குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
  • v  குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
  • v  வசிக்காத வீடும் கெடும்.
  • v  வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
  • v  குளிக்காத மேனி கெடும்.
  • v  குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
  • v  பொய்யான அழகும் கெடும்.
  • v  பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
  • v  துடிப்பில்லா இளமை கெடும்.
  • v  துவண்டிட்டால் வெற்றி கெடும்.
  • v  தூங்காத இரவு கெடும்.
  • v  தூங்கினால் பகலும் கெடும்.
  • v  கவனமில்லா செயலும் கெடும்.
  • v  கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...