முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது கெடும்?

 வாசித்ததில் நேசித்தது!

தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புபவர்கள் துவங்க வேண்டியது ஔவையாரிடம் இருந்துதான்! அவரளவுக்கு எளிமையாக, வாழ்வின் நெறிகளையும், ஒழுக்கமாக வாழ வழிகளையும் கூறியவர்கள் யாருமில்லை.

இதைச் செய்யாதே என்று சொல்லாமல், இதைச் செய்தால் கெட்டுவிடும் என்று வலியுறுத்துவது சிறந்த நடை. அனைவரும் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள். படித்து பயனுறுங்கள்.

எது கெடும்?

  • v  பாராத பயிரும் கெடும்.
  • v  பாசத்தினால் பிள்ளை கெடும்
  • v  கேளாத  கடனும் கெடும்.
  • v  கேட்கும்போது உறவு கெடும்.
  • v  தேடாத செல்வம் கெடும்.
  • v  தெகிட்டினால் விருந்து கெடும்.
  • v  ஓதாத கல்வி கெடும்.
  • v  ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
  • v  சேராத உறவும் கெடும்.
  • v  சிற்றின்பன் பெயரும் கெடும்.
  • v  நாடாத நட்பும் கெடும்.
  • v  நயமில்லா சொல்லும் கெடும்.
  • v  கண்டிக்காத பிள்ளை கெடும்.
  • v  கடன்பட்டால் வாழ்வு கெடும்.
  • v  பிரிவால் இன்பம் கெடும்.
  • v  பணத்தால் அமைதி கெடும்.
  • v  சினமிகுந்தால் அறமும் கெடும்.
  • v  சிந்திக்காத செயலும் கெடும்.
  • v  சோம்பினால் வளர்ச்சி கெடும்.
  • v  சுயமில்லா வேலை கெடும்.
  • v  மோகித்தால் முறைமை கெடும்.
  • v  முறையற்ற உறவும் கெடும்.
  • v  அச்சத்தால் வீரம் கெடும்.
  • v  அறியாமையால் முடிவு கெடும்.
  • v  உழுவாத நிலமும் கெடும்.
  • v  உழைக்காத உடலும்  கெடும்.
  • v  இறைக்காத கிணறும் கெடும்.
  • v  இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
  • v  இல்லாலில்லா வம்சம் கெடும்.
  • v  இரக்கமில்லா மனிதம் கெடும்.
  • v  தோகையினால் துறவு கெடும்.
  • v  துணையில்லா வாழ்வு கெடும்.
  • v  ஓய்வில்லா முதுமை கெடும்.
  • v  ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
  • v  அளவில்லா ஆசை கெடும்.
  • v  அச்சப்படும் கோழை கெடும்.
  • v  இலக்கில்லா பயணம் கெடும்.
  • v  இச்சையினால் உள்ளம் கெடும்.
  • v  உண்மையில்லா காதல் கெடும்.
  • v  உணர்வில்லாத இனமும் கெடும்.
  • v  செல்வம்போனால் சிறப்பு கெடும்.
  • v  சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
  • v  தூண்டாத திரியும் கெடும்.
  • v  தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
  • v  காய்க்காத மரமும் கெடும்.
  • v  காடழிந்தால் மழையும் கெடும்.
  • v  குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
  • v  குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
  • v  வசிக்காத வீடும் கெடும்.
  • v  வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
  • v  குளிக்காத மேனி கெடும்.
  • v  குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
  • v  பொய்யான அழகும் கெடும்.
  • v  பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
  • v  துடிப்பில்லா இளமை கெடும்.
  • v  துவண்டிட்டால் வெற்றி கெடும்.
  • v  தூங்காத இரவு கெடும்.
  • v  தூங்கினால் பகலும் கெடும்.
  • v  கவனமில்லா செயலும் கெடும்.
  • v  கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...