முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது கெடும்?

 வாசித்ததில் நேசித்தது!

தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புபவர்கள் துவங்க வேண்டியது ஔவையாரிடம் இருந்துதான்! அவரளவுக்கு எளிமையாக, வாழ்வின் நெறிகளையும், ஒழுக்கமாக வாழ வழிகளையும் கூறியவர்கள் யாருமில்லை.

இதைச் செய்யாதே என்று சொல்லாமல், இதைச் செய்தால் கெட்டுவிடும் என்று வலியுறுத்துவது சிறந்த நடை. அனைவரும் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள். படித்து பயனுறுங்கள்.

எது கெடும்?

  • v  பாராத பயிரும் கெடும்.
  • v  பாசத்தினால் பிள்ளை கெடும்
  • v  கேளாத  கடனும் கெடும்.
  • v  கேட்கும்போது உறவு கெடும்.
  • v  தேடாத செல்வம் கெடும்.
  • v  தெகிட்டினால் விருந்து கெடும்.
  • v  ஓதாத கல்வி கெடும்.
  • v  ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
  • v  சேராத உறவும் கெடும்.
  • v  சிற்றின்பன் பெயரும் கெடும்.
  • v  நாடாத நட்பும் கெடும்.
  • v  நயமில்லா சொல்லும் கெடும்.
  • v  கண்டிக்காத பிள்ளை கெடும்.
  • v  கடன்பட்டால் வாழ்வு கெடும்.
  • v  பிரிவால் இன்பம் கெடும்.
  • v  பணத்தால் அமைதி கெடும்.
  • v  சினமிகுந்தால் அறமும் கெடும்.
  • v  சிந்திக்காத செயலும் கெடும்.
  • v  சோம்பினால் வளர்ச்சி கெடும்.
  • v  சுயமில்லா வேலை கெடும்.
  • v  மோகித்தால் முறைமை கெடும்.
  • v  முறையற்ற உறவும் கெடும்.
  • v  அச்சத்தால் வீரம் கெடும்.
  • v  அறியாமையால் முடிவு கெடும்.
  • v  உழுவாத நிலமும் கெடும்.
  • v  உழைக்காத உடலும்  கெடும்.
  • v  இறைக்காத கிணறும் கெடும்.
  • v  இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
  • v  இல்லாலில்லா வம்சம் கெடும்.
  • v  இரக்கமில்லா மனிதம் கெடும்.
  • v  தோகையினால் துறவு கெடும்.
  • v  துணையில்லா வாழ்வு கெடும்.
  • v  ஓய்வில்லா முதுமை கெடும்.
  • v  ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
  • v  அளவில்லா ஆசை கெடும்.
  • v  அச்சப்படும் கோழை கெடும்.
  • v  இலக்கில்லா பயணம் கெடும்.
  • v  இச்சையினால் உள்ளம் கெடும்.
  • v  உண்மையில்லா காதல் கெடும்.
  • v  உணர்வில்லாத இனமும் கெடும்.
  • v  செல்வம்போனால் சிறப்பு கெடும்.
  • v  சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
  • v  தூண்டாத திரியும் கெடும்.
  • v  தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
  • v  காய்க்காத மரமும் கெடும்.
  • v  காடழிந்தால் மழையும் கெடும்.
  • v  குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
  • v  குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
  • v  வசிக்காத வீடும் கெடும்.
  • v  வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
  • v  குளிக்காத மேனி கெடும்.
  • v  குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
  • v  பொய்யான அழகும் கெடும்.
  • v  பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
  • v  துடிப்பில்லா இளமை கெடும்.
  • v  துவண்டிட்டால் வெற்றி கெடும்.
  • v  தூங்காத இரவு கெடும்.
  • v  தூங்கினால் பகலும் கெடும்.
  • v  கவனமில்லா செயலும் கெடும்.
  • v  கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...