முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாள் ஒரு கனவு

 கனவுகள் - விளக்கங்கள், சுவராசியமான தகவல்கள்

எத்தனையோ கனவுகள் வந்ததுண்டு. ஆனால் இப்படி ஒரு கனவு வரும் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது. சுஜாதாவின் பாதிப்பாகத்தான் இருக்க வேண்டும். பின்னே, சயின்ஸ் பிக்ஸன் ரேஞ்சுக்கு கனவு வந்தால்? உடனே பதிவு செய்ய வில்லையென்றால் மறந்துவிடுவேன்.

நாள் : 09/07/2021 நேரம்: அதிகாலை நேரம் 3- 4 மணிக்குள் இருக்கலாம்.

கனவு எப்படி தொடங்கியது என்றெல்லாம் நினைவில்லை. ஒரு பாதி நிகழ்வில் நுழைந்தமாதிரி உணர்வு.. அதற்கு பின் கனவிலே தொடர்ந்து, சற்று நினைவு திரும்பி லூசிட் ட்ரீம் (Lucid dream) ஆக மாறுகிறது. நான் உள்ளே நுழைந்து டைரக்டர் போல திருத்தங்கள் சொல்கிறேன். எப்படி இதெல்லாம் ? 

சரி, கனவு நினைவு இருப்பதில் தொடங்கி...

நம் மொபைலில் கூகிள் மேப்ஸ் (Google Maps) இருக்கிறதல்லவா? அதேபோல் ஒரு ஆப் (App) ஒரு டேப்(Tab)பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

அந்த ஆப் , மனித எண்ணங்களையும், குணாதிசயங்களையும் பதிவு செய்து வைத்துள்ளது போலும். வயது, ஜென்டரை பதிவிடுகிறேன். அதில் கூகிள் மேப்பில் பாதைகள் காட்டுவது போல, வெவ்வேறு பாதைகள் ஒளிருகின்றன. நீங்கள் பணக்காரராக வேண்டுமா, இந்த பாதையைத் தேர்ந்தெடுங்கள் என்கிறது. பெரிய அறிவாளியாக (Genius) வேண்டுமா, இப்படிப் போங்கள் என்கிறது. அதேபோல தொழிலதிபராக வேண்டுமா, நடிகராக வேண்டுமா, அரசியல்வாதியாக வேண்டுமா, என்று பல வேண்டுமாக்கள்... (அந்தப் பாதைகளில் என்ன இருக்கிறது, நினைவில்லை..)

இந்த நிலையில் சற்று நினைவு வந்து லூசிட் ட்ரீமில் தொடர்கின்றேன். எனக்கு

இதெல்லாம் போதாது. டைம் மெசின் புரொகிராம் செய்து, எனது வாழ்க்கையை ரீவைண்டு (Rewind) பண்ணி, சில கரக்ஷன் செய்து திரும்ப வேண்டும் என்கிறேன். யாரிடம்? தெரியவில்லை.  அவ்வளவுதான் கனவு... இது ஹாலிவுட் சினிமா பாதிப்புதான். ஆனால் முதல் பாதி என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

கனவுகள்

கனவு என்பது ஒருவர் தூங்கும்போது அவரது மனத்தில் ஏற்படும் காட்சிகள், உணர்வுகள், ஓசைகள், நிகழ்வுகள் அகியவற்றைக் குறிக்கிறது. நம் மூளையில் உள்ள நினைவுகள், தகவல்கள் அகியவற்றிலிருந்து கதாபாத்திரங்களை, இடங்களை உருவாக்கி ஒரு கற்பனை உலகத்தை உருவாக்குகின்றது.

கனவுகளைப் பற்றிய விளக்கங்கள் எல்லாமே அநுமானங்கள் தான். இதுவரை அறிவியல் ரீதியான தீர்க்கமான விளக்கங்கள் இல்லை.

கனவு எப்படி உருவாகிறது?

பெருவாரியான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு - நமது மூளை எப்போதும் தகவல்களைச் சேகரிப்பதும், உத்தரவிடுவதும் என வெளிப்புற செயல்பாடுகளை கவனிக்கும் ஒரு பகுதி- வெளிப்புற மனம் (Conscious mind), சேகரித்த தகவல்களை பிரிப்பதும், நினைவில் கொள்வதும், தேவையில்லாதவற்றை ஒதுக்குவதும் ஒரு பகுதி - ஆழ்மனம் (Sub-conscious Mind). நாம் விழித்திற்கும் நேரத்தைவிட உறங்கும்போது மூளை அல்லது மனம் அதிகமாக செயல்படுகிறது. அப்படி ஆழ்மனம் கடினமாக செயல்படும்போது, வெளிமனத்தில் சில காட்சிகளை உருவாக்கிவிடுகிறது. அவையே கனவுகள்.

நாம் கனவு காணும்போது கண்ணின் மணி வேகமாக இடம் வலமாக நகர்ந்து கொண்டே இருக்கும். இதை REM (Rapid Eye Movement) என்பார்கள். எல்லோருக்குமே தினமும் 3-4 கனவுகள் வரும். ஆனால் நினைவுக்கு வருவது மிகச்சிலவே என்கிறார்கள். அதேபோல கனவின் தொடக்கமும், முடிவும் நினைவுக்கு வருவதே இல்லை. கனவுகளின் நீளம் சில விநாடிகளில் தொடங்கி 20-30 நிமிடங்கள் வரை. நமது 8 மணி நேரத் தூக்கத்தில் 2 மணி நேரமே REM தூக்கம் இருக்கும். அதுவே கனவுகள் வரும் நேரம்.

லூசிட் ட்ரீம்ஸ் (Lucid Dreams) எனப்படும் தெளிவான கனவுகள், நாம் நினைவோடு காணும் கனவுகள். அவற்றை நாம் கட்டுப்படுத்தவும், வடிவமைக்கவும் முடியும். கிறிஸ்டோபர் நோலனின் 'இன்செப்சன்' (INCEPTION) திரைப்படத்தில் கண்டோமல்லவா? பயிற்சியின் மூலம் நம்மாலும் லூசிட் ட்ரீம்ஸ்சை உருவாக்க முடியும்.

குழந்தைகள் தூக்கத்தில் பாதிநேரம் கனவிலேயே இருக்கும். மனநோயாளிகளுக்கு கனவே வராது. நீரிழிவு நோயாளிகளுக்கும்.வராது - இரவில் அடிக்கடி விழிப்பதால். கண்பார்வையில்லாதவர்களுக்கு கனவுகள் காட்சிகளாக இல்லாமல், உணர்வுகளாக வேறுமாதிரியாக ( ஓசை, மணம் போன்று) இருக்கும் என்கிறார்கள்.

சிக்மண்ட் ப்ராய்டு என்ன சொல்கிறார்?

ஆஸ்திரிய உளவியல் நிபுணர் சிக்மண்ட் ப்ராய்டுதான் முதலில் தீவிரமாக கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவர் 1899ல் 'கனவுகளின் விளக்கம்' (The Interpretation of Dreams) என்ற நூலை எழுதினார். இன்று வரை அதுதான் கனவு ஆராய்ச்சிக்கான பிரபலமான நூல். 

அதில் - கனவுகள்  ஒழுங்கற்றவை, அவை உள்மன ஆசைகளின் வெளிப்பாடு; உண்ர்வுகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

கனவுகள் சாதாரண மானவற்றில் தொடங்கி விநோதமான, இயற்கைக்கு மாறுபட்ட நிகழ்வாக பலவிதங்களில் வரலாம். எல்லாமே ஆழ்மனதின் ஜாலங்கள். அதில் பரவசம், அதிர்ச்சி, பயம், மந்திர மாயங்கள், பயணங்கள், துக்கம், பாலுணர்வு (sexual) போன்ற பல உணர்வுகளையும் அனுபவிக்கலாம். இதில் ப்ராய்டு, மேற்கத்திய உலக பண்பாடுகளின்படி, வெகுவாரியான கனவுகளுக்கான காரணம் பாலுணர்வே என்கிறார். (அவரது Oedipus Complex theory தெரியுமோ? படியுங்கள்) அவருக்கு புட்பாலில் இருந்து பூட்டு சாவி வரை எல்லாமே செக்ஸ்தான் காரணம்.

Hobson's Dreams Theory Characteristics

அவரைப் போன்றே ஜான் ஆல்லன் ஹாப்சன்(John Allen Hobson) என்ற உளவியல் நிபுணர் REM தூக்கத்தைப் பற்றி ஆராய்ந்துள்ளார். 

கனவுகள் - சில தகவல்கள், மேற்கோள்கள், பழமொழிகள்

  • எகிப்தியர்கள் கனவுகளை தெய்வீகச் செயல் பாடாகக் கருதினர். கடவுளர்கள் மனிதர்களுக்கு அனுப்பும் செய்திகளாகக் கருதினர்.
  • உலகில் முதலாகப் பதிவு செய்யப்பட்ட கனவுகள் - 3100 BC யில் மெசபடோமியாவில் பாபிலோனியர்களுக்கு பாறைகளில் கனவுகளைச் செதுக்கி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மெழுகு, அரக்கு போன்ற பொருட்களிலும் எழுதி வைத்துள்ளனர். அவை இப்போதும் அருங்காட்சியகங்களில் உள்ளன.
  • நமது சங்க நூல்களிலும் நிறைய கவிதைகளிலும், இலக்கியங்களிலும் கனவுகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • கனவுகளின் பலன்களைத் தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் அதிகம். ஜோதிடத்தைப் போன்று வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் உள்ளன. உண்மை யாரறிவார்?
  • அதிகாலையில் காணும்கனவு பலிக்கும் என்பர். கண்ணகியும், கோப்பெருந்தேவியும் அதிகாலையில் கனவு கண்டதால் அக்கனவு பலித்தது. அது காப்பியக் கனவு ஆகும். மக்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வரும்  நம்பிக்கை இது.
  • பொதுவாக ஏதாவது பயத்தோடு தூங்கினால் கெட்ட கனவுகளாக வரும் என்பது எனது நம்பிக்கை.
  • "ஊமை கண்ட கனவு போல"- ஒரு பழமொழி. யாரிடமும் சொல்லமுடியாத கனவுகளை (நிகழ்வுகளையும்) இப்படிக் கூறுவர்
  • சிலர் (சோம்பேறிகள்) விழித்துக் கொண்டிருக்கும்போது தங்களைப் பற்றியும் நடக்க முடியாத செயல்களைக் குறித்தும் கனவு கண்டு கொண்டே இருப்பர். அது 'பகற் கனவு' 
  • சில கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளையும் எடுத்துரைத்துள்ளதாக நம்பிக்கைகள் உண்டு.
  • கனவுகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலமாகவும் அமைந்திருக்கின்றன. கணிதமேதை ராமானுஜம் அவர்கள் பல கணக்குகளுக்கு விடை காண கனவுகள் துணைபுரிந்ததாக எழுதியுள்ளார். தையல் மிஷின், DNA வளையம், Periodic Table, Benzene ஆகியவை கண்டு பிடிக்க கனவுகள் உதவியுள்ளதாகக் கூறுகின்றனர்.
  • கனவு மெய்ப்பட வேண்டும் - பாரதியார்
  • உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - அப்துல் கலாம்
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா ?
  • கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா ? - பழமொழிகள்

கனவு காணுங்கள் - விழிகளை மூடி! சொர்க்கமும் தெரியலாம்!










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...