முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவராசியமான மர்ஃபியின் விதிகள் (Murphy's Law)

சிரிக்க மட்டும்!

டார்க் காமெடி அல்லது டார்க் ஹியூமர் (Dark Comedy or Dark Humour) என்று
சொல்வோமில்லையா? வாழ்க்கையில் அது போல நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் - நகைச்சுவை துணுக்குகளாகச் (Epigram)  சொன்னால் அதுதான் 
மர்ஃபியின் விதி.
தவறக் கூடியது அனைத்தும் தவறும்”(Whatever can go wrong will go wrong) என்று கூறுகிறது மர்ஃபியின் விதி.

அமெரிக்க வான்படை பொறியியலாளர் எட்வர்ட் மர்ஃபி என்பவரின் பெயரால் இது வழங்கப்படுகிறது. மர்ஃபி அமெரிக்க வான்படை ஊர்திகளில் பாதுகாப்பு முறைகளையும் எந்திரங்களையும் வடிவமைக்கும் பிரிவில் பணிபுரிந்தவர். அவற்றை வடிவமைக்கும் போது கிட்டிய பட்டறிவினால் அவர் உருவாக்கிய பழமொழியே மர்ஃபியின் விதியாக மாறியது. இதே பொருள் கொண்ட பழமொழிகள் முன்பே வேறுபல இடங்களிலும் காலங்களிலும் வழங்கப்பட்டிருந்தாலும் மர்ஃபியின் பெயரே அதற்கு நிலைத்து விட்டது.

அமெரிக்காவில் மர்ஃபியின் விதி என்றால் அதுவே இங்கிலாந்தில் சாட் விதி (Sod's Law).

அறிவியல் பார்வை

ரிச்சார்ட் டௌகின்ஸ் (Richard Dawkins) கருத்துப்படி, மர்ஃபி / சாட் விதி  (Murphy / Sod law) போன்ற சட்டங்கள் முட்டாள்தனமானது அல்லது ஏற்புடையது அல்ல. ஒரு குறிப்பிட்ட வகை நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் ஏற்படலாம் என்று டௌகின்ஸ் சுட்டிக்காட்டுகிறார், ஆனால் அவர்கள் தொந்தரவாக இருக்கும் போது மட்டுமே கவனித்துள்ளனர். அவர் ஒரு உதாரணம் விமானத்தின் சத்தம் என்பதில் தலையிடுகிறார். விமானம் எல்லா நேரத்திலும் வானில் உள்ளது, ஆனால் அவை பிரச்சனையை ஏற்படுத்தும் போது மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது உறுதிப்படுத்துதலை உறுதிப்படுத்தும் (confirmation bias) ஒரு வடிவமாகும். அதை உறுதிப்படுத்த அதே மாதிரி நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் அதற்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை அவர்கள்
எடுத்துக் கொள்வதில்லை.

எனது பார்வை
நமது வாழ்க்கையில் எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகள், நமது மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது. நல்ல நிகழ்வுகளை நாம் அனுபவித்துவிட்டு மறந்துவிடுகிறோம்.

எனக்கு முன்பு இதுபோல பல நிகழ்வுகள்

. 'டிராபிக் சிக்னல் நாம் அவசரமாக செல்ல நேரும்போதுதான் அதிகமாக சிவப்புக்கு மாறும். 

சிக்னல் சரியாக பச்சைக்கு மாறும் போதுதான் டூவீலர் பெட்ரோல் ரிசர்வு ஆகி வண்டி ஆப் (off) ஆகும்'. 

"நாம் பேருந்துக்கு காத்திருக்கும் போது, நாம் செல்ல வேண்டிய இடத்துக்கான பேருந்து மட்டும் வராது; இல்லையேல் மிகத்தாமதமாக கூட்டத்துடன் வந்து நிற்காமல் போகும்."

இதுபோல் அடிக்கடி நடந்து மனச் சோர்வடைந்திருக்கிறேன். உண்மையில் அவை அபூர்வமாகத்தான் நடந்திருக்கும். ஒரு வருடத்தில் 4,5 முறை நடந்திருக்கும். ஆனால் அடிக்கடி நடப்பதுபோல் ஒரு உணர்வு. அப்படிதான் மர்ஃபியின் விதி என்பது என் கருத்து.

இதுபோன்ற எதிர்மறை நிகழ்வுகளையெல்லாம் மறந்து நல்ல நிகழ்வுகளை நினைவில் கொள்வதே நல்லது. அதுவே நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும்.

இந்த மர்ஃபியின் விதிகளை நகைச்சுவைகளாக படித்துவிட்டு மறந்து விடுங்கள்!

மர்ஃபியின் விதிகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன். முழுமையாக படிக்க இணைப்பும் கொடுத்துள்ளேன்.

சில மர்ஃபியின் விதிகள்
  • ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்
  • ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்
  • நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர்பாராதவகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்
  • எல்லாமே சரியாக நடப்பதுபோல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்
  • நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசைதான் வேகமாக நகர ஆரம்பிக்கும்
  • ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும்போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்
  • எந்த ஒரு வேலையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிப்பதற்கான வழி தென்படும்
  • உண்மை உங்கள் பக்கம் இருந்தால் அதை யாருமே அதை நம்புவதில்லை
  • யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது
  • ஏற்கனவே தாமதமாக இருக்கும் ஒரு மென்பொருள் வேலை, புதிதாக ஆட்களைச் சேர்த்தால் இன்னும் தாமதமாகும்
  • நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போதுதான் உங்கள் பின்னால் கையைக் கட்டிகொண்டு நிற்பார்
  • இப்போது (உங்கள் காதலியிடம் ) எது ஆர்வமூட்டுகிறதோ அதுவே பின்னாளில் எரிச்சலூட்டும்
  •  ஒரு மேதாவி என்பவர் யாரென்றால் யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் "ஒன்றுமில்லை" என்பது வரை. அதாவது ஒன்றுமில்லாத விஷயத்தை அதிகம் அறிந்து வைத்திருப்பவர் தான் மேதாவி
  • ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள் நம்பி விடுவார்.ஆனால் பக்கத்து மேசையில் தற்போது தான் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அதைத் தொட்டுப்பார்க்காமல் விட மாட்டார்!
  • காதல் ஒரு சிறந்த எதிரி அல்லது மோசமான நண்பன்
  • தவறான ஒரு முடிவை நம்பிக்கையுடன் அறிவுபூர்வமாக எடுப்பதற்கு பெயர்தான் லாஜிக்
  • உங்களை விட்டால் இந்த இடத்துக்குத் தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். நடந்து கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு உத்தியோக உயர்வு அளிக்க இயலும்?
  • எந்த கடிதத்திலும் இரண்டு கேள்விகளை (ஒன்றாக) மறந்தும் கேட்டு விடாதீர்கள். எந்தக் கேள்விக்கு மிகவும் பதிலை எதிர்பார்த்திருக்கிறீர்களோ அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது.

  • உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் உங்களைவிட குறைந்த வேகத்திலேயே செல்லும்
  • ஒரு உணவகத்தின் வெற்றி என்பது கூட்டமாக இருக்கையில் வேகமாகவும் கூட்டமே இல்லாத சமயத்தில் மிக மெதுவாகவும் பரிமாறுவதில் தான் இருக்கிறது
  • ஒரு நாட்டின் அதிகாரத்துவமும், சாக்கடையும் ஒன்று தான். கழிசடைகள் மட்டுமே மேலே வர முடியும்
  • யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்தத் தவறை யார் மீது சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம்
  • ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்
  • ஒரு திட்டத்தின் படிகள் - (1) மகிழ்ச்சி (2) கற்பனை (3) குழப்பம் (4) தவறு செய்தவரைத் தேடுதல் (5) தவறே செய்யாதவரைத் தண்டித்தல் (6) சம்பந்தமே இல்லாதவருக்குப் பரிசு வழங்குதல்
  • பணத்தின் அளவு பெருகப் பெருக அதன் மதிப்பு குறையும்
  • எப்போது நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணர்கிறீர்களோ, அப்போதே அந்த நிலை மாறிவிடும்
  • இந்த விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதனால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை ☺☺☺

மேலும் மர்ஃபியின் விதிகள் கீழே லின்க்கில்







































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...