முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு குட்டிக் கதை

 

ஒரு குட்டிக் கதை

(இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை)

ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது, வணிகர்கள், தொழில் செய்வோருக்கு கடுமையான வரி, கோவில்களைக் கொள்ளையடிப்பது, பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி, கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது.

அவன் மகனை அழைத்து, என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் என்ன ஆசை என்று கேட்க, வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான்.

அடுத்தநாள், வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் அரசனுக்கே சொந்தம் என அறிவிக்கப்பட்டது. கோவில்களையெல்லாம் இடித்து கொள்ளையடித்தனர். அரசு அதிகாரிகள் பிள்ளைகள் மட்டுமே கல்வி கற்க அனுமதி. கன்னிப் பெண்கள் திருமணத்திற்கு முன் அந்தப்புரம் வர கட்டளையிட்டனர். எதிர்ப்பவர்களையெல்லாம் கொன்றனர்.

ஒரு வாரத்தில் மக்கள், "இவனுக்கு இவன் தந்தையே பரவாயில்லை, கொள்ளை மட்டும்தான் அடிப்பான். மக்களைத் துன்புறுத்த மாட்டான், நல்லவன்" என்றனர். அவனும் நிம்மதியாகக் கண்ணை மூடினான்.

ஆனால் மகனுக்கு இந்த ஆட்சி முறையே பிடித்தது. அரசு அதிகாரிகளும் வீரர்களும் இந்த ஆட்சியே சிறந்தது என்றனர். காட்டாட்சியே தொடர்ந்தது.

கதை முடியவில்லை.

ஒருநாள் அரசனுக்கும் தன் தந்தையைப் போலவே மரண பயம் வந்தது. ஆனால் நன்றாக இருக்கும்போதே. அவ்ன் தன் மகனை அழைத்து எல்லாம் கூறினான். அதற்கு அவன்.”நீங்கள் கவலைப் படாதீர்கள் அப்பா! நாளையே எனக்கு முடிசூட்டுங்கள், பிறகு பாருங்கள்; உங்களுக்கு நல்ல பெயர் ஈட்டித்தருகிறேன்” என்றான்.

அடுத்த நாளே முடிசூட்டப்பட்டது. அரசனான மகன் செய்த முதல் வேலை தந்தையின் தலையைச் சீவினான். செத்த பிறகு யார் என்ன பேசிக்கொண்டால் என்ன? இப்போது நீ திருந்தி நல்ல ஆட்சி செய்கிறேன் என்று, எனது சந்தோஷத்தையும் கெடுத்துவிடுவாய்.அதற்குத்தான் என்றான். மக்களும் இவன் தந்தை நல்லவன்தான்; அவனது தந்தையைக் கொல்லவில்லையே என்றனர். வழக்கம்போல் அரசு அதிகாரிகளும், வீரர்களும்,மிகச்சிறந்த ஆட்சி என்றனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... - சுஜாதா சிறுகதை (1965)

  மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை         - சுஜாதா மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது. இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல). மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள். எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு. மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .  கதையின் பெயர்:  மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... "டிட்டோ" என்றே...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....