முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி 

இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது

நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல..

அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா..

அவ என்ன சொன்னாலும் பிடிக்கும்,

எது பேசினாலும் பிடிக்கும்,

பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும்,

கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான்.

 ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து, நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு, நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா..

 சாப்பிட்டியா

என்ன பண்றே

 பைக் பார்த்து கவனமா ஓட்டு

உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா.. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா..

கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா..

சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா..

பல காயங்களுக்கு மருந்து போடுவா, சில காயங்களுக்கு அவளே காரணமாவா..

இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா..

அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா..

ஒரு பெரிய மனக்கஷ்டத்தை தூக்கிட்டு திரியும் போது இதெல்லாம் பிரச்சனையா ன்னு அதை தன்னுடைய தலையில தூக்கி வச்சிப்பா..

தாயா இருப்பா

புள்ளையா இருப்பா

டீச்சரா இருப்பா

வழிகாட்டியா இருப்பா

எல்லாமுமா இருப்பா...

காதலே தராத மகிழ்வு ஒன்னு இந்த உலகத்துல இருக்குதுன்னா அது அவ தான்...

அவளை போல இருக்கிற தேவதைகளை எல்லாம் இறுக்க பிடிச்சு வச்சிக்கங்க.

 எந்த சமயத்திலும் எவனுக்காகவும் எவளுக்காகவும் விட்டு தந்துடாதீங்க.

அவகிட்ட உங்க வாழ்க்கையை கொடுத்துட்டு பேசாம இருங்க அவ பார்த்துக்குவா...

காதலுடன்

 💜💜💜FB


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...