முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி 

இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது

நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல..

அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா..

அவ என்ன சொன்னாலும் பிடிக்கும்,

எது பேசினாலும் பிடிக்கும்,

பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும்,

கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான்.

 ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து, நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு, நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா..

 சாப்பிட்டியா

என்ன பண்றே

 பைக் பார்த்து கவனமா ஓட்டு

உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா.. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா..

கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா..

சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா..

பல காயங்களுக்கு மருந்து போடுவா, சில காயங்களுக்கு அவளே காரணமாவா..

இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா..

அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா..

ஒரு பெரிய மனக்கஷ்டத்தை தூக்கிட்டு திரியும் போது இதெல்லாம் பிரச்சனையா ன்னு அதை தன்னுடைய தலையில தூக்கி வச்சிப்பா..

தாயா இருப்பா

புள்ளையா இருப்பா

டீச்சரா இருப்பா

வழிகாட்டியா இருப்பா

எல்லாமுமா இருப்பா...

காதலே தராத மகிழ்வு ஒன்னு இந்த உலகத்துல இருக்குதுன்னா அது அவ தான்...

அவளை போல இருக்கிற தேவதைகளை எல்லாம் இறுக்க பிடிச்சு வச்சிக்கங்க.

 எந்த சமயத்திலும் எவனுக்காகவும் எவளுக்காகவும் விட்டு தந்துடாதீங்க.

அவகிட்ட உங்க வாழ்க்கையை கொடுத்துட்டு பேசாம இருங்க அவ பார்த்துக்குவா...

காதலுடன்

 💜💜💜FB


கருத்துகள்