முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி 

இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது

நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல..

அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா..

அவ என்ன சொன்னாலும் பிடிக்கும்,

எது பேசினாலும் பிடிக்கும்,

பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும்,

கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான்.

 ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து, நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு, நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா..

 சாப்பிட்டியா

என்ன பண்றே

 பைக் பார்த்து கவனமா ஓட்டு

உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா.. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா..

கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா..

சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா..

பல காயங்களுக்கு மருந்து போடுவா, சில காயங்களுக்கு அவளே காரணமாவா..

இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா..

அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா..

ஒரு பெரிய மனக்கஷ்டத்தை தூக்கிட்டு திரியும் போது இதெல்லாம் பிரச்சனையா ன்னு அதை தன்னுடைய தலையில தூக்கி வச்சிப்பா..

தாயா இருப்பா

புள்ளையா இருப்பா

டீச்சரா இருப்பா

வழிகாட்டியா இருப்பா

எல்லாமுமா இருப்பா...

காதலே தராத மகிழ்வு ஒன்னு இந்த உலகத்துல இருக்குதுன்னா அது அவ தான்...

அவளை போல இருக்கிற தேவதைகளை எல்லாம் இறுக்க பிடிச்சு வச்சிக்கங்க.

 எந்த சமயத்திலும் எவனுக்காகவும் எவளுக்காகவும் விட்டு தந்துடாதீங்க.

அவகிட்ட உங்க வாழ்க்கையை கொடுத்துட்டு பேசாம இருங்க அவ பார்த்துக்குவா...

காதலுடன்

 💜💜💜FB


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... - சுஜாதா சிறுகதை (1965)

  மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை         - சுஜாதா மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது. இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல). மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள். எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு. மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .  கதையின் பெயர்:  மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... "டிட்டோ" என்றே...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....