முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஓய், ஓய்வெடுக்க ஆராய்ச்சி பண்ணுறீங்களா?”

 ஓய், ஓய்வெடுக்க ஆராய்ச்சி பண்ணுறீங்களா?”

எடுங்கள் 7 வகை ஓய்வு - வெளிச்சம் பிடிச்சவங்களுக்கு!

சொல்லுங்க பாஸ், எப்போதும் டென்ஷனா இருக்கிறீங்களா? இதோ உங்களுக்கான மருந்து!

வேலை, வீடு, குடும்பம், சமூகம்... அடடா, நம்ம லைஃப்லே எங்க ஓய்வு? "அட ஓய்வுன்னா தூக்கம்தானே?" என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் முற்றிலும் தவறாக நினைக்கிறீர்கள்!

உண்மையில் ஓய்வு என்பது 7 வகை இருக்கு. ஆம், நீங்கள் சரியாகவே கேட்டீர்கள் - 7 வகை! இதோ பாருங்க:

1. உடல் ஓய்வு (Physical Rest) 🛌

அறிகுறிகள்:

·        உடல் சோர்வா இருக்கா? எனர்ஜி இல்லையா?

·        தசைகள் புலம்புற மாதிரி இருக்கா?

·        அடிக்கடி தலைவலி உடல் வலி வருதா?

   அப்போ இதை செய்யுங்க

  • செயலற்ற ஓய்வு: தினமும் 7+ மணி நேரம் தூங்குங்க, தேவைப்பட்டால் பகலில் கொஞ்சம் உறங்குங்க
  • செயலில் ஓய்வு: மூச்சுப்பயிற்சி, யோகா, மசாஜ் செய்யலாமே!


2. மன ஓய்வு (Mental Rest) 🧠

அறிகுறிகள்:

·        மனம் எப்போதாவது கவலைக் கடலில் மூழ்குதா? மன சோர்வா?

·        வாழ்க்கை ஏன் சுவையில்ல,  போரடிக்குதுன்னு தோணுதா?

·        எதுக்கெடுத்தாலும் கோபம் வருதா? எரிச்சல் ஆகுறீங்களா?


இது தான் சமயம் ஓய்வெடுக்க!

·        வேலையில் கவனச்சிதறல் இல்லாத நேரம் ஒதுக்குங்க

·        மன அமைதி தரும் இசை கேளுங்க

·        மனசுக்கும் ரிலாக்ஸ் வேணும்! தியானம் பழகுங்க.

 

3. உணர்வு ஓய்வு (Emotional Rest) 💙

அறிகுறிகள்: 

·        சுகமோ துக்கமோ அதிகமா தாக்குதா?

·        பாதுகாப்பின்மையாக உணர்கிறீர்களா? உங்கள் பலத்தின் மேல் நம்பிக்கை குறைகிறதா?

·        மற்றவர்களின் மேல் வெறுப்பு வருகிறதா?

அப்போ இதை செய்யுங்க

·        மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கிறத நிறுத்துங்க!

·        நம் எண்ணங்களுக்கு எப்பவும் எதிரா பேசுற ஆட்களை தவிருங்கள்; அவர்களிடம் விவாதிக்காதீர்கள்!

·        எதுக்கு பயமடா சாமி?’ – மனசைக் கேளுங்க! 'அச்சம் என்பது மடமையடா' – சொல்லுங்க!

 

4. சமூக ஓய்வு (Social Rest) 👥

அறிகுறிகள்: 

  •        மனம் தனிமையை நாடுதா?
  •         குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தள்ளி இருக்கிறீர்களா?
  •         அறுவை ஆசாமிகள் உங்கள் திறன்களை உபயோகமில்லாமல் செய்கிறார்களா?

அப்போ இதை செய்யுங்க

·        யாராக இருந்தாலும், சில நேரம் "சமூக தொந்தரவு" விட்டு ஓடணும்!

·        உங்களுக்கு பிடித்த நபர்களை தேடி போய் பேசுங்க.

  • உங்களை drain பண்ணும் நபர்களிடமிருந்து இடைவெளி விடுங்க!
  •   பொது ஆர்வமுள்ள குழுக்களில் சேருங்க. சங்கங்கள், கிளப்கள்ல சேர்ந்து பணியாற்றுங்கள்

 

5. ஆன்மீக ஓய்வு (Spiritual Rest) 🙏

அறிகுறிகள்: 

  •        வாழ்க்கையில் திருப்தி இல்லையா?
  •        உங்கள் மேல் நம்பிக்கையின்மையா? 
  •        உங்களுக்கு உந்துதல் கிடைக்கவில்லையா? 

அப்போ இதை செய்யுங்க

  • தினமும் நன்றி சொல்லும் பழக்கம் வளர்த்துக் கொள்ளுங்க!
  • மெளனமாக அமர்ந்து, மூச்சை கணக்கிட்டு பாருங்க

·        மத சேவைகளில் பங்கேற்பு. உங்கள் மத தலங்களுக்கு சென்று வாருங்கள்!

 

6. புலன் ஓய்வு (Sensory Rest) 👀

அறிகுறிகள்:

·        கண்கள்தயவு செஞ்சு விடுப்பான்னு சொல்றதா?

·        சுவை மணம் கூட  உணர முடியலையா, எதுவும் பிடிக்கலையா?

·        அதிக சத்தங்கள் தொந்தரவு செய்கிறதா?

 

அப்போ இதை செய்யுங்க

·        எல்லா ஸ்கிரீன்- இருந்தும் விலகுங்க

·        தொந்தரவு செய்யும் விஷயங்களை மாற்றுங்க (volume குறை, light dim பண்ணு)

·        கண்களை மூடி ஒரு நிமிடம் ரிலாக்ஸ்

 

7. படைப்பு ஓய்வு (Creative Rest) 🎨

அறிகுறிகள்:

  •         வேலையை தவிர நேரமே கிடைக்கவில்லையா?
  •         இயற்கையை ரசிக்க மனமில்லையா?
  •        புதிய சிந்தனைகளை மனதில் விதைக்க முடியவில்லையா (brainstorming)

 

அப்போ இதை செய்யுங்க

·        வேலையின் இடையே சிறிய 15 நிமிட இடைவெளிகள், வருடாந்தர விடுமுறைகள் - 15 நாட்களாவது எடுங்க

·        வேலைகளை, கவலைகளை மறந்து கட்டுப்பாடின்றி வெளியில் நேரம் செலவிடுங்க

·        நடனம், இசை படிப்பு, புதிய கலைகளை பயிலுங்கள்

 

முடிவுரை

நண்பர்களே, இந்த 7 வகை ஓய்வையும் சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால், உங்கள் வாழ்க்கை ஒரு சூப்பர் ஹிட் படம் மாதிரி இருக்கும்!

"All work and no play makes Jack a dull boy" - ஆனால் "All types of rest makes you the best!" 😉

மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எனவே இந்த ஓய்வு வகைகளை உங்கள் வாழ்க்கையில் அமல்படுத்தி பாருங்கள்!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜோதிடம் உண்மையா, பொய்யா? நம்பலாமா. கூடாதா?

 ஜோதிடம் - ஒரு அலசல் ஒவ்வொரு மனிதனுக்குமே நாளை என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் தீராத ஆர்வம். அதுவும் வாழ்க்கையில் மோசமான கட்டத்தில் இருந்தால் சொல்லவே வேண்டாம். ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவர் 'நாளை நன்றாக இருக்கும்; எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று சொன்னால் போதும்'. ஒரு மன நிம்மதி; உண்மையா என்றெல்லாம் தேவையில்லை. இன்றைக்கு ஒரு ஆறுதல்.. உண்மையிலேயே ஜோதிடம் சரியா? இல்லை ஏமாற்றுவேலையா? பார்ப்போம்.. முதலில் ஒரு கதை ( இல்லை, சரித்திரம்). ஐந்தாம் நூற்றாண்டில், மகதப் பேரரசில் விக்ரமாதித்ய மகாராஜாவின் அமைச்சரவையில் ஒருவர் ' மிகிரர்' . சிறந்த கணிதமேதை, வானியல் நிபுணர், ஜோதிட வல்லுநர். அவர் அரசரின் புதல்வரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு 18 வயது வரைதான் வாழ்வார். அதோடு ஆயுள் முடிந்தது' என்கிறார். அதே போல நடக்கிறது. (இதைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. பன்றியால் சாவார் என்றார். கடும் பாதுகாப்பிலும் பன்றி கொடி கம்பால் இறந்தார் என்பது போல). மிகிரரின் திறமையைப் பாராட்டி அரசர் 'வராஹ' என்ற பட்டத்தைக் கொடுக்க ' வராஹமிகிரர்...

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...