முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்பார்வை - மாறா

மாறா

இந்தத் திரைப்படம் வருமுன்பே, ' மலையாள "சார்லி" ரீமேக் என்றதனால், எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சார்லியை 2 முறை பார்த்திருக்கிறேன். என் எதிர்பார்ப்புக்கு ஈடாக இருந்ததா? கடைசியில் சொல்கிறேன். அடிக்கடி சார்லியும் மனதில் நிழலாடுவதால் அதோடு ஒப்பீட்டையும் கலந்தே சொல்கிறேன்.

தமிழில் வந்துள்ள அடுத்த பயணக்கதை (முன்னர் அன்பே சிவம், பையா). 

கதாநாயகிக்கு (ஸ்ரதா ஸ்ரீநாத்) பயணத்தில் ஆர்வம். தனக்கு திருமணம் நிச்சயிப்பது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பயணப்படுகிறாள். அப்போது தான் சிறுவயதில் வேறு ஒருவரிடம் கேட்ட கதையை யாரோ வீடுகளின் வெளிச்சுவர்களில் பெரிய பெரிய சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பதை காண்கிறாள். யார் வரைந்தது என்றால் மாறா என்கிறார்கள். அவள் வாடகைக்கு பிடிக்கும் வீடும் மாறா இருந்த வீடு. அந்த வீட்டில் பல கலைநயமிக்க பொருட்களை காண்கிறாள். கூட ஒரு நோட்டில் ஒரு சம்பவத்தை படங்களாக வரைந்து வைத்திருக்கிறான். அதுவும் முடிவில்லாமல் இருக்கிறது.

அதன் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், மாறாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம்  விசாரிக்கிறாள். அவனைப்பற்றி மேலும் சில நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறாள். கடைசியில் அந்த நோட்டில் இருந்த படங்களில் சம்பந்தபட்ட பெண்ணையே(ஷிவதா) சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மாறா அடைக்களம் கொடுத்த இடத்தில், மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பெரியவருக்கு(மௌலி)  ப்ளாஸ்பேக்கில் காதல் தோல்வி இருக்கிறது. அவர் மனசமாதானம் அடைந்தாரா, இவள் மாறாவை சந்தித்தாளா என்பதுதான் கிளைமாக்ஸ்.

வாழ்க்கையில் பயணப்படுவதும், சுற்றி உள்ளவர்களிடம் அன்பு காட்டுவதும்தான் மகிழ்ச்சி தரும் என்பதை வலியுறுத்தும் கதை. சார்லியில் பயணத்திற்கு காரணம் எல்லாம் தேவை இல்லை என்று இருக்கும். முடிவில் நாயகனும் நாயகியும் இணைந்து பயணத்தை தொடர்வார்கள். மாறாவில் அதற்கு காரணத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர். (தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவே சரி என்பது என் கருத்து. இதுவே கொஞ்சம் போரடிக்கிறது ) கண்டிப்பாக கவனிக்கதக்க இயக்கம். மேலும் மிகச்சிறந்த பாத்திர படைப்பு (casting). வாழ்த்துக்கள் திலீப்குமார்!

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு (தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமார்)  இசை (ஜிப்ரான்) மற்றும் லொகெஷன். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் அஜயனுக்கு சபாஷ். பெரிய திரையில் இன்னும் சிறப்பாகவும் இருக்கும்.

மாதவனுக்கு டைடில் ரோல் என்றாலும் சில காட்சிகளே வருகிறார். ஸ்ரதா நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் சார்லி - பார்வதி போல ஒரு இன்னொசன்ட் முகமாக இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் ( கீர்த்தி சுரேஷ் எனது சாய்ஸ்). மௌலி வசனங்களும், நடிப்பும் சிறப்பு. கிளைமாக்ஸும் அவரது கதையை வைத்தே முடிகிறது.ஷிவதா நன்றாக நடித்துள்ளார். சீமா, அபிராமி, எம்..எஸ். பாஸ்கர், அலெக்ஸ் பாபு, குரு சோமசுந்தரம். கிஷோர், அனைவரும் சில காட்சிகள் என்றாலும் நன்றாக செய்துள்ளனர்.

படத்தில் முதல் முக்கால் மணி நேரம் கதை மெதுவாக செல்வதால் போரடிக்கிர உணர்வை தருகிறது. அதை முன்னமே கூறியது போல ஒளிப்பதிவும், இசையும் ஈடுகட்டுகின்றன. அடுத்து, நாயகிக்கு சிறு வயதில் சொல்லப்படும் கதை அவ்வளவு சுவராசியமில்லை. இன்னும் நல்ல கதையை தேடியிருக்கலாம். சார்லியில் கிளைமாக்ஸ் பூரம் திருவிழாவில் நாயகன் நாயகி சந்திப்பு மிக சிறப்பாக இருக்கும். அது இதில் மிஸ்ஸிங்.\

கமர்சியல் படம் அல்லாத பீல்குட் டிராமா பார்க்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக பார்க்கலாம். எனக்கு திருப்தியை தந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...