முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்பார்வை - மாறா

மாறா

இந்தத் திரைப்படம் வருமுன்பே, ' மலையாள "சார்லி" ரீமேக் என்றதனால், எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சார்லியை 2 முறை பார்த்திருக்கிறேன். என் எதிர்பார்ப்புக்கு ஈடாக இருந்ததா? கடைசியில் சொல்கிறேன். அடிக்கடி சார்லியும் மனதில் நிழலாடுவதால் அதோடு ஒப்பீட்டையும் கலந்தே சொல்கிறேன்.

தமிழில் வந்துள்ள அடுத்த பயணக்கதை (முன்னர் அன்பே சிவம், பையா). 

கதாநாயகிக்கு (ஸ்ரதா ஸ்ரீநாத்) பயணத்தில் ஆர்வம். தனக்கு திருமணம் நிச்சயிப்பது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பயணப்படுகிறாள். அப்போது தான் சிறுவயதில் வேறு ஒருவரிடம் கேட்ட கதையை யாரோ வீடுகளின் வெளிச்சுவர்களில் பெரிய பெரிய சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பதை காண்கிறாள். யார் வரைந்தது என்றால் மாறா என்கிறார்கள். அவள் வாடகைக்கு பிடிக்கும் வீடும் மாறா இருந்த வீடு. அந்த வீட்டில் பல கலைநயமிக்க பொருட்களை காண்கிறாள். கூட ஒரு நோட்டில் ஒரு சம்பவத்தை படங்களாக வரைந்து வைத்திருக்கிறான். அதுவும் முடிவில்லாமல் இருக்கிறது.

அதன் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், மாறாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம்  விசாரிக்கிறாள். அவனைப்பற்றி மேலும் சில நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறாள். கடைசியில் அந்த நோட்டில் இருந்த படங்களில் சம்பந்தபட்ட பெண்ணையே(ஷிவதா) சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மாறா அடைக்களம் கொடுத்த இடத்தில், மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பெரியவருக்கு(மௌலி)  ப்ளாஸ்பேக்கில் காதல் தோல்வி இருக்கிறது. அவர் மனசமாதானம் அடைந்தாரா, இவள் மாறாவை சந்தித்தாளா என்பதுதான் கிளைமாக்ஸ்.

வாழ்க்கையில் பயணப்படுவதும், சுற்றி உள்ளவர்களிடம் அன்பு காட்டுவதும்தான் மகிழ்ச்சி தரும் என்பதை வலியுறுத்தும் கதை. சார்லியில் பயணத்திற்கு காரணம் எல்லாம் தேவை இல்லை என்று இருக்கும். முடிவில் நாயகனும் நாயகியும் இணைந்து பயணத்தை தொடர்வார்கள். மாறாவில் அதற்கு காரணத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர். (தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவே சரி என்பது என் கருத்து. இதுவே கொஞ்சம் போரடிக்கிறது ) கண்டிப்பாக கவனிக்கதக்க இயக்கம். மேலும் மிகச்சிறந்த பாத்திர படைப்பு (casting). வாழ்த்துக்கள் திலீப்குமார்!

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு (தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமார்)  இசை (ஜிப்ரான்) மற்றும் லொகெஷன். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் அஜயனுக்கு சபாஷ். பெரிய திரையில் இன்னும் சிறப்பாகவும் இருக்கும்.

மாதவனுக்கு டைடில் ரோல் என்றாலும் சில காட்சிகளே வருகிறார். ஸ்ரதா நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் சார்லி - பார்வதி போல ஒரு இன்னொசன்ட் முகமாக இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் ( கீர்த்தி சுரேஷ் எனது சாய்ஸ்). மௌலி வசனங்களும், நடிப்பும் சிறப்பு. கிளைமாக்ஸும் அவரது கதையை வைத்தே முடிகிறது.ஷிவதா நன்றாக நடித்துள்ளார். சீமா, அபிராமி, எம்..எஸ். பாஸ்கர், அலெக்ஸ் பாபு, குரு சோமசுந்தரம். கிஷோர், அனைவரும் சில காட்சிகள் என்றாலும் நன்றாக செய்துள்ளனர்.

படத்தில் முதல் முக்கால் மணி நேரம் கதை மெதுவாக செல்வதால் போரடிக்கிர உணர்வை தருகிறது. அதை முன்னமே கூறியது போல ஒளிப்பதிவும், இசையும் ஈடுகட்டுகின்றன. அடுத்து, நாயகிக்கு சிறு வயதில் சொல்லப்படும் கதை அவ்வளவு சுவராசியமில்லை. இன்னும் நல்ல கதையை தேடியிருக்கலாம். சார்லியில் கிளைமாக்ஸ் பூரம் திருவிழாவில் நாயகன் நாயகி சந்திப்பு மிக சிறப்பாக இருக்கும். அது இதில் மிஸ்ஸிங்.\

கமர்சியல் படம் அல்லாத பீல்குட் டிராமா பார்க்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக பார்க்கலாம். எனக்கு திருப்தியை தந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...