முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்பார்வை - மாறா

மாறா

இந்தத் திரைப்படம் வருமுன்பே, ' மலையாள "சார்லி" ரீமேக் என்றதனால், எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சார்லியை 2 முறை பார்த்திருக்கிறேன். என் எதிர்பார்ப்புக்கு ஈடாக இருந்ததா? கடைசியில் சொல்கிறேன். அடிக்கடி சார்லியும் மனதில் நிழலாடுவதால் அதோடு ஒப்பீட்டையும் கலந்தே சொல்கிறேன்.

தமிழில் வந்துள்ள அடுத்த பயணக்கதை (முன்னர் அன்பே சிவம், பையா). 

கதாநாயகிக்கு (ஸ்ரதா ஸ்ரீநாத்) பயணத்தில் ஆர்வம். தனக்கு திருமணம் நிச்சயிப்பது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பயணப்படுகிறாள். அப்போது தான் சிறுவயதில் வேறு ஒருவரிடம் கேட்ட கதையை யாரோ வீடுகளின் வெளிச்சுவர்களில் பெரிய பெரிய சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பதை காண்கிறாள். யார் வரைந்தது என்றால் மாறா என்கிறார்கள். அவள் வாடகைக்கு பிடிக்கும் வீடும் மாறா இருந்த வீடு. அந்த வீட்டில் பல கலைநயமிக்க பொருட்களை காண்கிறாள். கூட ஒரு நோட்டில் ஒரு சம்பவத்தை படங்களாக வரைந்து வைத்திருக்கிறான். அதுவும் முடிவில்லாமல் இருக்கிறது.

அதன் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், மாறாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம்  விசாரிக்கிறாள். அவனைப்பற்றி மேலும் சில நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறாள். கடைசியில் அந்த நோட்டில் இருந்த படங்களில் சம்பந்தபட்ட பெண்ணையே(ஷிவதா) சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மாறா அடைக்களம் கொடுத்த இடத்தில், மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பெரியவருக்கு(மௌலி)  ப்ளாஸ்பேக்கில் காதல் தோல்வி இருக்கிறது. அவர் மனசமாதானம் அடைந்தாரா, இவள் மாறாவை சந்தித்தாளா என்பதுதான் கிளைமாக்ஸ்.

வாழ்க்கையில் பயணப்படுவதும், சுற்றி உள்ளவர்களிடம் அன்பு காட்டுவதும்தான் மகிழ்ச்சி தரும் என்பதை வலியுறுத்தும் கதை. சார்லியில் பயணத்திற்கு காரணம் எல்லாம் தேவை இல்லை என்று இருக்கும். முடிவில் நாயகனும் நாயகியும் இணைந்து பயணத்தை தொடர்வார்கள். மாறாவில் அதற்கு காரணத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர். (தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவே சரி என்பது என் கருத்து. இதுவே கொஞ்சம் போரடிக்கிறது ) கண்டிப்பாக கவனிக்கதக்க இயக்கம். மேலும் மிகச்சிறந்த பாத்திர படைப்பு (casting). வாழ்த்துக்கள் திலீப்குமார்!

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு (தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமார்)  இசை (ஜிப்ரான்) மற்றும் லொகெஷன். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் அஜயனுக்கு சபாஷ். பெரிய திரையில் இன்னும் சிறப்பாகவும் இருக்கும்.

மாதவனுக்கு டைடில் ரோல் என்றாலும் சில காட்சிகளே வருகிறார். ஸ்ரதா நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் சார்லி - பார்வதி போல ஒரு இன்னொசன்ட் முகமாக இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் ( கீர்த்தி சுரேஷ் எனது சாய்ஸ்). மௌலி வசனங்களும், நடிப்பும் சிறப்பு. கிளைமாக்ஸும் அவரது கதையை வைத்தே முடிகிறது.ஷிவதா நன்றாக நடித்துள்ளார். சீமா, அபிராமி, எம்..எஸ். பாஸ்கர், அலெக்ஸ் பாபு, குரு சோமசுந்தரம். கிஷோர், அனைவரும் சில காட்சிகள் என்றாலும் நன்றாக செய்துள்ளனர்.

படத்தில் முதல் முக்கால் மணி நேரம் கதை மெதுவாக செல்வதால் போரடிக்கிர உணர்வை தருகிறது. அதை முன்னமே கூறியது போல ஒளிப்பதிவும், இசையும் ஈடுகட்டுகின்றன. அடுத்து, நாயகிக்கு சிறு வயதில் சொல்லப்படும் கதை அவ்வளவு சுவராசியமில்லை. இன்னும் நல்ல கதையை தேடியிருக்கலாம். சார்லியில் கிளைமாக்ஸ் பூரம் திருவிழாவில் நாயகன் நாயகி சந்திப்பு மிக சிறப்பாக இருக்கும். அது இதில் மிஸ்ஸிங்.\

கமர்சியல் படம் அல்லாத பீல்குட் டிராமா பார்க்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக பார்க்கலாம். எனக்கு திருப்தியை தந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...