முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்பார்வை - மாறா

மாறா

இந்தத் திரைப்படம் வருமுன்பே, ' மலையாள "சார்லி" ரீமேக் என்றதனால், எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சார்லியை 2 முறை பார்த்திருக்கிறேன். என் எதிர்பார்ப்புக்கு ஈடாக இருந்ததா? கடைசியில் சொல்கிறேன். அடிக்கடி சார்லியும் மனதில் நிழலாடுவதால் அதோடு ஒப்பீட்டையும் கலந்தே சொல்கிறேன்.

தமிழில் வந்துள்ள அடுத்த பயணக்கதை (முன்னர் அன்பே சிவம், பையா). 

கதாநாயகிக்கு (ஸ்ரதா ஸ்ரீநாத்) பயணத்தில் ஆர்வம். தனக்கு திருமணம் நிச்சயிப்பது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பயணப்படுகிறாள். அப்போது தான் சிறுவயதில் வேறு ஒருவரிடம் கேட்ட கதையை யாரோ வீடுகளின் வெளிச்சுவர்களில் பெரிய பெரிய சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பதை காண்கிறாள். யார் வரைந்தது என்றால் மாறா என்கிறார்கள். அவள் வாடகைக்கு பிடிக்கும் வீடும் மாறா இருந்த வீடு. அந்த வீட்டில் பல கலைநயமிக்க பொருட்களை காண்கிறாள். கூட ஒரு நோட்டில் ஒரு சம்பவத்தை படங்களாக வரைந்து வைத்திருக்கிறான். அதுவும் முடிவில்லாமல் இருக்கிறது.

அதன் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், மாறாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம்  விசாரிக்கிறாள். அவனைப்பற்றி மேலும் சில நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறாள். கடைசியில் அந்த நோட்டில் இருந்த படங்களில் சம்பந்தபட்ட பெண்ணையே(ஷிவதா) சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மாறா அடைக்களம் கொடுத்த இடத்தில், மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பெரியவருக்கு(மௌலி)  ப்ளாஸ்பேக்கில் காதல் தோல்வி இருக்கிறது. அவர் மனசமாதானம் அடைந்தாரா, இவள் மாறாவை சந்தித்தாளா என்பதுதான் கிளைமாக்ஸ்.

வாழ்க்கையில் பயணப்படுவதும், சுற்றி உள்ளவர்களிடம் அன்பு காட்டுவதும்தான் மகிழ்ச்சி தரும் என்பதை வலியுறுத்தும் கதை. சார்லியில் பயணத்திற்கு காரணம் எல்லாம் தேவை இல்லை என்று இருக்கும். முடிவில் நாயகனும் நாயகியும் இணைந்து பயணத்தை தொடர்வார்கள். மாறாவில் அதற்கு காரணத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர். (தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவே சரி என்பது என் கருத்து. இதுவே கொஞ்சம் போரடிக்கிறது ) கண்டிப்பாக கவனிக்கதக்க இயக்கம். மேலும் மிகச்சிறந்த பாத்திர படைப்பு (casting). வாழ்த்துக்கள் திலீப்குமார்!

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு (தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமார்)  இசை (ஜிப்ரான்) மற்றும் லொகெஷன். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் அஜயனுக்கு சபாஷ். பெரிய திரையில் இன்னும் சிறப்பாகவும் இருக்கும்.

மாதவனுக்கு டைடில் ரோல் என்றாலும் சில காட்சிகளே வருகிறார். ஸ்ரதா நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் சார்லி - பார்வதி போல ஒரு இன்னொசன்ட் முகமாக இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் ( கீர்த்தி சுரேஷ் எனது சாய்ஸ்). மௌலி வசனங்களும், நடிப்பும் சிறப்பு. கிளைமாக்ஸும் அவரது கதையை வைத்தே முடிகிறது.ஷிவதா நன்றாக நடித்துள்ளார். சீமா, அபிராமி, எம்..எஸ். பாஸ்கர், அலெக்ஸ் பாபு, குரு சோமசுந்தரம். கிஷோர், அனைவரும் சில காட்சிகள் என்றாலும் நன்றாக செய்துள்ளனர்.

படத்தில் முதல் முக்கால் மணி நேரம் கதை மெதுவாக செல்வதால் போரடிக்கிர உணர்வை தருகிறது. அதை முன்னமே கூறியது போல ஒளிப்பதிவும், இசையும் ஈடுகட்டுகின்றன. அடுத்து, நாயகிக்கு சிறு வயதில் சொல்லப்படும் கதை அவ்வளவு சுவராசியமில்லை. இன்னும் நல்ல கதையை தேடியிருக்கலாம். சார்லியில் கிளைமாக்ஸ் பூரம் திருவிழாவில் நாயகன் நாயகி சந்திப்பு மிக சிறப்பாக இருக்கும். அது இதில் மிஸ்ஸிங்.\

கமர்சியல் படம் அல்லாத பீல்குட் டிராமா பார்க்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக பார்க்கலாம். எனக்கு திருப்தியை தந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... - சுஜாதா சிறுகதை (1965)

  மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை         - சுஜாதா மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது. இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல). மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள். எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு. மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .  கதையின் பெயர்:  மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... "டிட்டோ" என்றே...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....