முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்?


இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய
முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும் 
சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர்.
அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன.

எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள் சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில்
முக்கியமானவை இவை. எனக்கு இந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாலே தூக்கம் வந்துவிடும். அதனால் இது மாதிரி புத்தகங்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன்
  
பிறகு சுஜாதா அபிமானி ஆன பின் பிடிக்காமலே போனது. அப்போதுதான் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகங்களும் பிரபலம். இருந்தாலும் என்னை அவ்வளவு கவரவில்லை. அந்த வயதில், எல்லாப் புத்தகங்களுமே அறிவுப் பெட்டகங்கள் என்றுதான் எண்ணினேன். பிறகுதான், இடதுசாரி புத்தகங்கள், ஆன்மீகப் புத்தகஙகள், அரசியல் புத்தகங்கள்,வரலாற்று புத்தகஙகள் எல்லாவற்றிலும் உண்மையும் உண்டு. பொய்களும் உண்டு (எழுதுபவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ) என்று உணர்ந்தேன். ஆனாலும் அவற்றின் நுணுக்கமான அரசியல், கருத்து திணிப்புகள், விற்பனை தந்திரங்கள் எல்லாம் பிற்காலத்தில்தான் தெரிந்து கொண்டேன். 
தன்னம்பிக்கை புத்தகங்களின் பலமே வார்த்தை ஜாலங்களும், அந்த நேரத்தில் அவை கொடுக்கும் கவர்ச்சிகரமான போதைதான். புத்தகம் கொஞ்சம் பிரபலமானால் போதும். மார்கெட்டிங் உத்திகள் ஆரம்பமாகி விடும். அதற்காக அவற்றில் கருத்துகளே இல்லை என்று கூறவில்லை.

எந்த ஒரு புத்தக வாசிப்பிலும் 3 நற்பயன்கள் உண்டு. சிந்தனை தூண்டல், வார்த்தைப் பிரயோகங்கள் கற்றல் (Vocabulary), ஏதாவது ஒரு கருத்தை கற்றல். எனவே எந்தப் புத்தகமானாலும் வாசிப்பதில் தவறில்லை.

பகுத்தறியும் திறனை வளர்த்துக் கொள்வதுதான் முக்கிய தேவை. இந்தியாவில் இந்த
சுயமுன்னேற்ற இலக்கியமே இல்லையா? நிறைய இருக்கிறது. நமது நூல்கள் வெறும் செல்வம் சேர்க்கும் வழிகள், தலைவனாக்கும் வழிகள் என்று பொருள் சார்ந்த வாழ்வை (Materialistic Life) ஆதரிப்பதில்லை. மனிதனை நல்வழிப்படுத்துதல், அதன்மூலம் அவனுக்கு மன அமைதியை உருவாக்குதல், அதனால் அவன் வாழ்வில் முன்னேற வழி செய்தல் என்கிற ரீதியில்தான் இருக்கும். சங்க நூல்கள், திருக்குறளிலிருந்து, ஆத்திசூடி, நாலடியார், மூதுரை போன்று ஆயிரக்கணக்கில் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு அவற்றை கொண்டு சேர்க்கும் கடமையும் நமக்கு உண்டு.

மேலைநாடுகள் முழுக்க இந்த பொருள் சார்ந்த வாழ்வையே நம்மிடம் திணிக்கின்றன. உடனடி செல்வந்தராவதற்கு வழி, இலட்சியங்களைக் கனவைத்
துரத்துவதுபோல் துரத்துவது என்பன எல்லாம் கவர்ச்சிகரமான எண்ணங்கள்தானே! நேர்மறை எண்ணங்களை (Positive Thinking) வளர்ப்பதற்கு எத்தனை புத்தகங்கள்? ஆனால் 
நமது வள்ளுவர்' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று எளிமையாகச் சொல்கிறாரே! 'ஊக்கமுடைமை' அதிகாரம் முழுக்கவே தன்னம்பிக்கை ஊட்டுபவைதானே! விவேகானந்தரையும் படியுங்கள். மனம் எழுச்சி கொள்ளும்.

நான் படித்து உணர்ந்து கொண்டது எல்லாம் இதுதான் : வாழ்க்கை - உடல் ஆரோக்கியம், செல்வம், உறவுகள், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகிய நான்கு தூண்களால் ஆனது. இவை நான்கும் சமமாக உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அப்படி அமைத்துக் கொள்ள வேண்டும். சுயநலம், எதிர்மறை சிந்தனைகள், பயம் ஆகிய மூன்றும் கரையான்போல மகிழ்ச்சியை அரிக்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருங்கள். Simple!

நிறைவு செய்யும் முன் உங்களுக்காக, தற்போது பிரபலமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் சுய முன்னேற்றப் புத்தகங்கள்- 
நிறைய வாசியுங்கள். பணக்காரராவதற்கு அல்ல, அறிவை வளர்ப்பதற்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... - சுஜாதா சிறுகதை (1965)

  மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை         - சுஜாதா மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது. இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல). மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள். எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு. மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .  கதையின் பெயர்:  மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... "டிட்டோ" என்றே...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....