முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்?


இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய
முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும் 
சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர்.
அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன.

எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள் சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில்
முக்கியமானவை இவை. எனக்கு இந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாலே தூக்கம் வந்துவிடும். அதனால் இது மாதிரி புத்தகங்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன்
  
பிறகு சுஜாதா அபிமானி ஆன பின் பிடிக்காமலே போனது. அப்போதுதான் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகங்களும் பிரபலம். இருந்தாலும் என்னை அவ்வளவு கவரவில்லை. அந்த வயதில், எல்லாப் புத்தகங்களுமே அறிவுப் பெட்டகங்கள் என்றுதான் எண்ணினேன். பிறகுதான், இடதுசாரி புத்தகங்கள், ஆன்மீகப் புத்தகஙகள், அரசியல் புத்தகங்கள்,வரலாற்று புத்தகஙகள் எல்லாவற்றிலும் உண்மையும் உண்டு. பொய்களும் உண்டு (எழுதுபவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ) என்று உணர்ந்தேன். ஆனாலும் அவற்றின் நுணுக்கமான அரசியல், கருத்து திணிப்புகள், விற்பனை தந்திரங்கள் எல்லாம் பிற்காலத்தில்தான் தெரிந்து கொண்டேன். 
தன்னம்பிக்கை புத்தகங்களின் பலமே வார்த்தை ஜாலங்களும், அந்த நேரத்தில் அவை கொடுக்கும் கவர்ச்சிகரமான போதைதான். புத்தகம் கொஞ்சம் பிரபலமானால் போதும். மார்கெட்டிங் உத்திகள் ஆரம்பமாகி விடும். அதற்காக அவற்றில் கருத்துகளே இல்லை என்று கூறவில்லை.

எந்த ஒரு புத்தக வாசிப்பிலும் 3 நற்பயன்கள் உண்டு. சிந்தனை தூண்டல், வார்த்தைப் பிரயோகங்கள் கற்றல் (Vocabulary), ஏதாவது ஒரு கருத்தை கற்றல். எனவே எந்தப் புத்தகமானாலும் வாசிப்பதில் தவறில்லை.

பகுத்தறியும் திறனை வளர்த்துக் கொள்வதுதான் முக்கிய தேவை. இந்தியாவில் இந்த
சுயமுன்னேற்ற இலக்கியமே இல்லையா? நிறைய இருக்கிறது. நமது நூல்கள் வெறும் செல்வம் சேர்க்கும் வழிகள், தலைவனாக்கும் வழிகள் என்று பொருள் சார்ந்த வாழ்வை (Materialistic Life) ஆதரிப்பதில்லை. மனிதனை நல்வழிப்படுத்துதல், அதன்மூலம் அவனுக்கு மன அமைதியை உருவாக்குதல், அதனால் அவன் வாழ்வில் முன்னேற வழி செய்தல் என்கிற ரீதியில்தான் இருக்கும். சங்க நூல்கள், திருக்குறளிலிருந்து, ஆத்திசூடி, நாலடியார், மூதுரை போன்று ஆயிரக்கணக்கில் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு அவற்றை கொண்டு சேர்க்கும் கடமையும் நமக்கு உண்டு.

மேலைநாடுகள் முழுக்க இந்த பொருள் சார்ந்த வாழ்வையே நம்மிடம் திணிக்கின்றன. உடனடி செல்வந்தராவதற்கு வழி, இலட்சியங்களைக் கனவைத்
துரத்துவதுபோல் துரத்துவது என்பன எல்லாம் கவர்ச்சிகரமான எண்ணங்கள்தானே! நேர்மறை எண்ணங்களை (Positive Thinking) வளர்ப்பதற்கு எத்தனை புத்தகங்கள்? ஆனால் 
நமது வள்ளுவர்' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று எளிமையாகச் சொல்கிறாரே! 'ஊக்கமுடைமை' அதிகாரம் முழுக்கவே தன்னம்பிக்கை ஊட்டுபவைதானே! விவேகானந்தரையும் படியுங்கள். மனம் எழுச்சி கொள்ளும்.

நான் படித்து உணர்ந்து கொண்டது எல்லாம் இதுதான் : வாழ்க்கை - உடல் ஆரோக்கியம், செல்வம், உறவுகள், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகிய நான்கு தூண்களால் ஆனது. இவை நான்கும் சமமாக உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அப்படி அமைத்துக் கொள்ள வேண்டும். சுயநலம், எதிர்மறை சிந்தனைகள், பயம் ஆகிய மூன்றும் கரையான்போல மகிழ்ச்சியை அரிக்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருங்கள். Simple!

நிறைவு செய்யும் முன் உங்களுக்காக, தற்போது பிரபலமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் சுய முன்னேற்றப் புத்தகங்கள்- 
நிறைய வாசியுங்கள். பணக்காரராவதற்கு அல்ல, அறிவை வளர்ப்பதற்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...