முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரெட்டோவின் கோட்பாடு - 80 /20 விதி (Pareto Principle - 80 / 20 Rule) அறிவோமா?

 பேரெட்டோவின் கோட்பாடு

80/20 விதி என்றால் என்ன? 

"80 சதவீத பலன்களைத் தருவது 20 சதவீத செயல்களே!" (80% of the Effects Caused by 20% of the Causes) அல்லது 80% விளைவுகளுக்குக் காரணம் 20% முயற்சிகளே!

இதைச் சொன்னவர்  வில்பிரடோ பேரெட்டோ (1848 - 1923) என்ற இத்தாலிய பொருளாதார வல்லுநர். அவர் அடிப்படையில் சிவில் இன்ஜினியர். மேலும் பொதுவுடைமைவாதி (Socialist), அரசியல் விஞ்ஞானி, தத்துவஞானி என்று பன்முகங்களைக் கொண்டவர். இத்தாலிய ரயில்வேயில் பணியமர்ந்து, பின் இத்தாலிய இரும்பு ஆலைகளில் உயர் பதவிகள் வகித்தவர். பொதுவுடைமைவாதியாக இருந்த அவர், பிற்காலத்தில்தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களால் மனம் நொந்து, அதற்கு எதிரான பாசிசக் கொள்கைகளை ஆதரிப்பவராக அறியப்பட்டார்.

 பேரெட்டோ, சமூகப் பொருளாதாரம், நுண்பொருளாதாரம் (Micro Economics), கணிதம் அனைத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு கொள்கைகளை வழங்கினார். அதுவே பேரெட்டோ திறன் (Pareto Efficiency) என்று பல்வேறு துறைகளை மேம்படுத்த உதவியது.

முதலில் அவர் கண்டறிந்து கூறிய ' இத்தாலியின் 80% சொத்துக்கள் 20% மக்களிடமே உள்ளது' என்பது பேரெட்டோவின் கோட்பாடு என அழைக்கப்பட்டது. அந்த 80/20 விகிதாச்சாரம் பிரபலமானது. அது அனைத்து துறைகளிலும் காணப்பட்டது.

சமுதாயத்தில் 80 % நிதி வளங்களை 20% மக்களே அனுபவிக்கின்றனர். அவர்களே அரசியலமைப்பிலும், அனைத்து துறைகளுலும் அதிகாரமிக்கவர்களாக உள்ளனர். இன்றுவரை அதே நிலைதான் உலகமெங்கும். 

பணியிடங்களில் பேரெட்டோவின் கொள்கை

  • 80% பணிகளை 20% பணியாளர்களே முடிக்கின்றனர். அதிலும் 80% பணிகளை 20% முயற்சியிலேயே முடித்துவிடுகின்றனர்.
  • பணியிடங்களில் 80% அரசியல் செய்வது 20% பணியாளர்களே.
  • 80% தவறுகள் 20% பணியாளர்களின் கவனக் குறைவே
  • 80% விபத்துகள் 20% பாதுகாப்பு நடவடிக்கைகளால் தவிர்க்கப்படுகின்றன.

விற்பனைத் துறையில்  பேரெட்டோவின் கொள்கை

  • 80% விற்பனை 20% பிரதிநிதிகளால் செய்யப்படுகிறது.
  • பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கம்பெனியில் 80% இலாபத்தை 20% பொருட்களே தருகின்றன.
  • 80% பொருட்களை 20% நுகர்வோரே வாங்குகின்றனர்.
  • 80% புகார்கள் 20% நுகர்வோரிடமிருந்தே வருகின்றன.

மென்பொருள் துறையில்  பேரெட்டோவின் கொள்கை

  • மைக்ரோசாப்ட், 80% பிழைகள் 20% கோடிங்கில் இருந்ததாக கண்டறிந்தனர். 20% முக்கிய பிழைகளை சரிசெய்ததில் 80% புகார்கள் குறைந்தன.
  • 20% பணியாளர்களுக்கு பயிற்சியளித்ததில் நிறுவனத்தின் 80% திறன் மேம்பட்டது.

மற்ற துறைகளில்

  • நாட்டில் 80% குற்றங்கள் 20% கிரிமினல்களால் செய்யப்படுகிறது
  • 80% சாலை விபத்துக்கள் 20% ஓட்டுனர்களால் ஏற்படுகிறது
  • 80% மாசு 20% ஆலைகளால் வருகிறது
எல்லாம் எளிதாக இருக்கிறதே. எளிதாக அனைத்து துறையிலும் வென்றுவிடலாமே என்கிறீர்களா? அதில்தான் சூட்சுமமே. எந்த 20% என்பதைக் கண்டறிய வேண்டுமே!

பேரெட்டோ ஆய்வு மற்றும் விளக்கப்படம் (Paretto Analysis, Paretto Chart)
ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து அளவீடுகளைக் கண்டறிய வேண்டும். உற்பத்தி திறனை தீர்மானிக்கும் முக்கிய பணிகள், நபர்கள், உபகரணங்கள், சூழல்கள்
அனைத்தும் விகிதாரச்சார ரீதியில் பதியப்படும். இதன் மூலம் துறையின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். தவறுகளைக் களைய முடியும்.

அந்த ஆய்வு முடிவுகள் ஒரு வரைபடத்தின் மூலம் விளக்கப்படுகிறது. அதில் சட்ட வரைபடமாகவும்(Bar Graph), வரி வரைபடமாகவும் (Line Graph) இருக்கும். சட்டங்கள் (Bar) குறைபாடுகளையோ, பிரச்னைகளையோ இறங்குவரிசையில் குறிப்பிடப்படும். வரி வடிவம் (Line) சதவீத விகிதாச் சாரத்தில் காட்டும். இதுவே பேரெட்டோ விளக்கப்படம்.
(Pareto in Statistical Chart -  Insert - Histogram - Pareto)

தர நிர்வாகத்தில் (Total Quality Management) பேரெட்டோ விளக்கப்படம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது வாழ்க்கையில் இந்த 80 /20 விதியை உபயோகிக்க முடியுமா?
  1. உங்கள் தின செயல்களை, நடவடிக்கைகளைப் பட்டியலிடுங்கள்
  2. அவற்றில் முக்கியமானவற்றைக் கண்டறியுங்கள்
  3. எவை எவை எவ்வளவு பலன் கொடுக்கின்றன என்பதைக் குறியுங்கள்
  4. குறைந்த பலன் தரும் செயல்களைக் குறைக்கவோ, மாற்றவோ முடியுமா என்று அலசி ஆராயுங்கள்
  5. அதிக பலனைத் தரக்கூடிய மதிப்பு மிக்க செயல்களை அதிகரிக்கத் திட்டமிடுங்கள்
  6. இப்போது 80 / 20 விதி மூலம் தரம் பிரித்து முன்னுரிமை அளிக்கவேண்டிய செயல்களைக் கண்டறிந்து அவற்றில் முதலில் கவனம் செலுத்தி முழு சக்தியையும்  பிரயோகியுங்கள் .பேரெட்டோ விதியின் மூலம் பலனடையுங்கள்!

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...