முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரெட்டோவின் கோட்பாடு - 80 /20 விதி (Pareto Principle - 80 / 20 Rule) அறிவோமா?

 பேரெட்டோவின் கோட்பாடு

80/20 விதி என்றால் என்ன? 

"80 சதவீத பலன்களைத் தருவது 20 சதவீத செயல்களே!" (80% of the Effects Caused by 20% of the Causes) அல்லது 80% விளைவுகளுக்குக் காரணம் 20% முயற்சிகளே!

இதைச் சொன்னவர்  வில்பிரடோ பேரெட்டோ (1848 - 1923) என்ற இத்தாலிய பொருளாதார வல்லுநர். அவர் அடிப்படையில் சிவில் இன்ஜினியர். மேலும் பொதுவுடைமைவாதி (Socialist), அரசியல் விஞ்ஞானி, தத்துவஞானி என்று பன்முகங்களைக் கொண்டவர். இத்தாலிய ரயில்வேயில் பணியமர்ந்து, பின் இத்தாலிய இரும்பு ஆலைகளில் உயர் பதவிகள் வகித்தவர். பொதுவுடைமைவாதியாக இருந்த அவர், பிற்காலத்தில்தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களால் மனம் நொந்து, அதற்கு எதிரான பாசிசக் கொள்கைகளை ஆதரிப்பவராக அறியப்பட்டார்.

 பேரெட்டோ, சமூகப் பொருளாதாரம், நுண்பொருளாதாரம் (Micro Economics), கணிதம் அனைத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு கொள்கைகளை வழங்கினார். அதுவே பேரெட்டோ திறன் (Pareto Efficiency) என்று பல்வேறு துறைகளை மேம்படுத்த உதவியது.

முதலில் அவர் கண்டறிந்து கூறிய ' இத்தாலியின் 80% சொத்துக்கள் 20% மக்களிடமே உள்ளது' என்பது பேரெட்டோவின் கோட்பாடு என அழைக்கப்பட்டது. அந்த 80/20 விகிதாச்சாரம் பிரபலமானது. அது அனைத்து துறைகளிலும் காணப்பட்டது.

சமுதாயத்தில் 80 % நிதி வளங்களை 20% மக்களே அனுபவிக்கின்றனர். அவர்களே அரசியலமைப்பிலும், அனைத்து துறைகளுலும் அதிகாரமிக்கவர்களாக உள்ளனர். இன்றுவரை அதே நிலைதான் உலகமெங்கும். 

பணியிடங்களில் பேரெட்டோவின் கொள்கை

  • 80% பணிகளை 20% பணியாளர்களே முடிக்கின்றனர். அதிலும் 80% பணிகளை 20% முயற்சியிலேயே முடித்துவிடுகின்றனர்.
  • பணியிடங்களில் 80% அரசியல் செய்வது 20% பணியாளர்களே.
  • 80% தவறுகள் 20% பணியாளர்களின் கவனக் குறைவே
  • 80% விபத்துகள் 20% பாதுகாப்பு நடவடிக்கைகளால் தவிர்க்கப்படுகின்றன.

விற்பனைத் துறையில்  பேரெட்டோவின் கொள்கை

  • 80% விற்பனை 20% பிரதிநிதிகளால் செய்யப்படுகிறது.
  • பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கம்பெனியில் 80% இலாபத்தை 20% பொருட்களே தருகின்றன.
  • 80% பொருட்களை 20% நுகர்வோரே வாங்குகின்றனர்.
  • 80% புகார்கள் 20% நுகர்வோரிடமிருந்தே வருகின்றன.

மென்பொருள் துறையில்  பேரெட்டோவின் கொள்கை

  • மைக்ரோசாப்ட், 80% பிழைகள் 20% கோடிங்கில் இருந்ததாக கண்டறிந்தனர். 20% முக்கிய பிழைகளை சரிசெய்ததில் 80% புகார்கள் குறைந்தன.
  • 20% பணியாளர்களுக்கு பயிற்சியளித்ததில் நிறுவனத்தின் 80% திறன் மேம்பட்டது.

மற்ற துறைகளில்

  • நாட்டில் 80% குற்றங்கள் 20% கிரிமினல்களால் செய்யப்படுகிறது
  • 80% சாலை விபத்துக்கள் 20% ஓட்டுனர்களால் ஏற்படுகிறது
  • 80% மாசு 20% ஆலைகளால் வருகிறது
எல்லாம் எளிதாக இருக்கிறதே. எளிதாக அனைத்து துறையிலும் வென்றுவிடலாமே என்கிறீர்களா? அதில்தான் சூட்சுமமே. எந்த 20% என்பதைக் கண்டறிய வேண்டுமே!

பேரெட்டோ ஆய்வு மற்றும் விளக்கப்படம் (Paretto Analysis, Paretto Chart)
ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து அளவீடுகளைக் கண்டறிய வேண்டும். உற்பத்தி திறனை தீர்மானிக்கும் முக்கிய பணிகள், நபர்கள், உபகரணங்கள், சூழல்கள்
அனைத்தும் விகிதாரச்சார ரீதியில் பதியப்படும். இதன் மூலம் துறையின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். தவறுகளைக் களைய முடியும்.

அந்த ஆய்வு முடிவுகள் ஒரு வரைபடத்தின் மூலம் விளக்கப்படுகிறது. அதில் சட்ட வரைபடமாகவும்(Bar Graph), வரி வரைபடமாகவும் (Line Graph) இருக்கும். சட்டங்கள் (Bar) குறைபாடுகளையோ, பிரச்னைகளையோ இறங்குவரிசையில் குறிப்பிடப்படும். வரி வடிவம் (Line) சதவீத விகிதாச் சாரத்தில் காட்டும். இதுவே பேரெட்டோ விளக்கப்படம்.
(Pareto in Statistical Chart -  Insert - Histogram - Pareto)

தர நிர்வாகத்தில் (Total Quality Management) பேரெட்டோ விளக்கப்படம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது வாழ்க்கையில் இந்த 80 /20 விதியை உபயோகிக்க முடியுமா?
  1. உங்கள் தின செயல்களை, நடவடிக்கைகளைப் பட்டியலிடுங்கள்
  2. அவற்றில் முக்கியமானவற்றைக் கண்டறியுங்கள்
  3. எவை எவை எவ்வளவு பலன் கொடுக்கின்றன என்பதைக் குறியுங்கள்
  4. குறைந்த பலன் தரும் செயல்களைக் குறைக்கவோ, மாற்றவோ முடியுமா என்று அலசி ஆராயுங்கள்
  5. அதிக பலனைத் தரக்கூடிய மதிப்பு மிக்க செயல்களை அதிகரிக்கத் திட்டமிடுங்கள்
  6. இப்போது 80 / 20 விதி மூலம் தரம் பிரித்து முன்னுரிமை அளிக்கவேண்டிய செயல்களைக் கண்டறிந்து அவற்றில் முதலில் கவனம் செலுத்தி முழு சக்தியையும்  பிரயோகியுங்கள் .பேரெட்டோ விதியின் மூலம் பலனடையுங்கள்!

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...