முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஐங்குறு நூறு கூறுவதென்ன? (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 4   ஐங்குறு நூறு - இலக்கியச் செறிவு 3 அடி முதல் 6 அடி வரை உள்ள 500 அகப்பாடல்கள் கொண்டது. ஐந்திணைகளுக்கும் 100 பாடல்கள் வீதம், ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார் நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார் குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர் பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார் முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார் ஒவ்வொரு திணையிலும் உள்ள 100 பாடல்கள் பத்துப் பத்து பாடல்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்ப...

அகநானூறு அறிவோம் ( பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 3  உள்ளக் கிளர்ச்சியூட்டும் அகநானூறு பாடல்கள் பெயரே அறிமுகப்படுத்துகிறது - இது 400 அகப்பாடல்கள் கொண்ட நூல். குறைந்தது 13 அடி முதல் 31 அடி நீளங்கொண்ட பாடல்களும் உண்டு. எனவே நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நூல் களிற்றுயானை நிரை - 120 (1 - 120) பாடல்கள் மணிமிடைப்பவளம் - 180 (121 - 300) பாடல்கள் நித்திலக்கோவை - 100 (301 - 400) பாடல்கள் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. மேலும்  1, 3, 5, 7, 9 என வரும் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணை ப் பாடல்கள் (200 பாடல்கள்) 2, 8  என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும்  குறிஞ்சித்திணை ப் பாடல்கள் (80 பாடல்கள்)  4, 14, 24 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் முல்லைத்திணை ப் பாடல்கள்(40 பாடல்கள்)  6, 16, 26 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் மருதத்திணை ப் பாடல்கள்(40 பாடல்கள்)  10, 20, 30 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணை ப் பாடல்கள் (40 பாடல்கள்) என அழகாகத் தொகுக்கப்பட்டது. இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரி...

ஒரு நாள் ஒரு கனவு

 கனவுகள் - விளக்கங்கள், சுவராசியமான தகவல்கள் எத்தனையோ கனவுகள் வந்ததுண்டு. ஆனால் இப்படி ஒரு கனவு வரும் என்று  நினைத்துக்கூட பார்க்கமுடியாது. சுஜாதாவின் பாதிப்பாகத்தான் இருக்க வேண்டும். பின்னே, சயின்ஸ் பிக்ஸன் ரேஞ்சுக்கு கனவு வந்தால்? உடனே பதிவு செய்ய வில்லையென்றால் மறந்துவிடுவேன் . நாள் : 09/07/2021 நேரம்: அதிகாலை நேரம் 3- 4 மணிக்குள் இருக்கலாம். கனவு எப்படி தொடங்கியது என்றெல்லாம் நினைவில்லை. ஒரு பாதி நிகழ்வில் நுழைந்தமாதிரி உணர்வு.. அதற்கு பின் கனவிலே தொடர்ந்து, சற்று நினைவு திரும்பி லூசிட் ட்ரீம் (Lucid dream) ஆக மாறுகிறது. நான் உள்ளே நுழைந்து டைரக்டர் போல திருத்தங்கள் சொல்கிறேன். எப்படி இதெல்லாம் ?  சரி, கனவு நினைவு இருப்பதில் தொடங்கி... நம் மொபைலில் கூகிள் மேப்ஸ் (Google Maps) இருக்கிறதல்லவா? அதேபோல் ஒரு ஆப் (App) ஒரு டேப்(Tab)பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்  அந்த ஆப் , மனித எண்ணங்களையும், குணாதிசயங்களையும் பதிவு செய்து வைத்துள்ளது போலும். வயது, ஜென்டரை பதிவிடுகிறேன். அதில் கூகிள் மேப்பில் பாதைகள் காட்டுவது போல, வெவ்வேறு பாதைகள் ஒளிருகின்றன. நீங்கள் பணக்காரராக ...

குறுந்தொகை - ஒரு எளிய பார்வை (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் -2  குறுந்தொகை - பண்டைத் தமிழனின் மேன்மை எட்டுத் தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் நூல். இது அகப்பொருள் பற்றியது. குறுந்தொகைப்பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கம், காதல் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நாகரீகம், மகளிர் மாண்புகள், அற உணர்வுகள் போன்றவற்றை அறியலாம். குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களால் ஆனதால் குறுந்தொகை என்று கூறப்படுகிறது. பாடல்களின் நீளம்  நான்கு அடி முதல் எட்டு அடி  வரை ஆகும். இதில் மொத்தம்  402 பாடல்கள்  உள்ளன். 205 புலவர்கள் பாடிய இந்நூலைத் தொகுத்தவர் ' பூரிக்கோ'  என்பவர். முதலில் பதிப்பித்தவர்  சி.வை.தாமோதரம் பிள்ளை . ஆராய்ச்சி பதிப்பு  உ.வே.சாமிநாத ஐயர் . இதில் 10 பாடல்கள் யார் பாடியதென்று தெரியவில்லை. உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டி எடுத்தாளப்பட்ட நூல். மேலும், சங்க நூல்களுள் முதலாவதாகத் தொகுக்கப்பட்ட நூலும்  இதுவே.  இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும்...

நற்றிணை - ஒரு எளிய பார்வை (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் -1  நற்றிணை - நல்வாழ்வின் பதிவு.. அறிமுகம் எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக் குறிப்பிடப்படும் நூல். நன்மை+திணை = நற்றிணை - சிறந்த ஒழுக்கம் என்ற பொருள் கொண்ட நூல். இது அகத்திணை நூல். ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரையில் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது. அதனால் ' நற்றிணை நானூறு' என்ற பெயரும் உண்டு. இதில் 187 புலவர்களின் பாடல்கள் உள்ளன.  இவற்றைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. தொகுக்க ஆதரவு நல்கியவர் "பாண்டிய மன்னன் பன்னாடு தந்த மாறன் வழுதி" பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதிய உரையே முதல் உரையாக கருதப்படுகிறது  (கீழே இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கி படித்து பயன் பெறுக) அகத்திணை அறிமுகம் "எல்லாவுயிர்க்குமின்பமென்பது தானமர்ந்து வரூஉ மேவற்றாகும் "  என்றார் தொல்காப்பியனார். இன்பம் என்பது எல்லாவுயிர்க்கும் உள்ளத்தோடு பொருந்தி வரும் உணர்வாகும். ஆணும் பெண்ணும் பொருந்தி வாழ்வதே இன்பம், அதுவே முக்கியமானது. இது எல்லா உயிர்களித்திலும் உள்ளது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஒழுக்கம் தவறாமல், நெறிமுறைகளுடன் வாழும் வழி காட்டுவதே அகத்திணை. அகத்திணை நிலம் சா...